NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தீவிரம்... அமமுக 10, பாஜக 29 இடங்களில் போட்டியா?

Mar 23, 2026,01:02 PM IST

சென்னை: ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்கொள்ள, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கூட்டணியின் முக்கிய அங்கமான பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் இருந்து, அதன் தோழமைக் கட்சிகளுக்கு ‘உள் ஒதுக்கீடு’ வழங்கும் முறை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.


அமமுக-விற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு?


இதுவரை கிடைத்த தகவல்களின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடுவதற்கு என முதற்கட்டமாக 45 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் ஒரு முக்கிய திருப்பமாக, டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு (AMMK) பாஜகவின் பங்கிலிருந்து 10 தொகுதிகள் உள் ஒதுக்கீடாக வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த தேர்தல்களில் அமமுக பெற்ற வாக்கு வங்கி மற்றும் தென் மாவட்டங்களில் அக்கட்சிக்கு இருக்கும் செல்வாக்கை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


பிற தோழமைக் கட்சிகளுக்கான பங்கீடு




பாஜக போட்டியிடத் திட்டமிட்டுள்ள 45 தொகுதிகளில், அமமுக-விற்கு ஒதுக்கப்பட்ட 10 இடங்கள் போக மீதமுள்ள சுமார் 29 தொகுதிகளில் பாஜக தனது சொந்த சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் (TMC), ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, மற்றும் ஜே.ஜே.கே (JJK) ஆகிய கட்சிகளுக்கு மீதமுள்ள தொகுதிகளைப் பிரித்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது சொல்லப்படுகிறது.


கூட்டணியின் வியூகம் :


இந்தத் தொகுதிப் பங்கீடு முறையானது, பெரிய கட்சிகளின் சின்னத்தின் கீழ் சிறிய கட்சிகளைப் போட்டியிட வைப்பதன் மூலம் வாக்குகளை ஒருமுகப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமமுக-வின் வருகை தென் மாவட்டங்களில் கூட்டணியின் பலத்தை அதிகரிக்கும் என பாஜக மேலிடம் நம்புகிறது.

தற்போது வெளியாகியுள்ள இந்தத் தகவல்கள் முதற்கட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அமைந்தவை என்றாலும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூட்டணிக் தலைவர்கள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் இந்த ‘உள் ஒதுக்கீடு’ முறை மற்ற கூட்டணிகளிலும் எதிரொலிக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


பியூஸ் கோயல் சென்னை வருகை :


பியூஸ் கோயல் சென்னை வந்த பிறகு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்கனவே கூறி இருந்தார். இந்நிலையில் இன்று சென்னை வந்துள்ள பியூஸ் கோயல், கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு இன்று அல்லது நாளை பாஜக போட்டியிடும் தொகுதிகள் எத்தனை என்பது குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என சொல்லப்படுகிறது

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்ன சொல்றீங்க?...ஆப்பிள் ஜூஸ் குடித்தால் ஆரோக்கியத்திற்கு ஆபத்தா?

news

நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்

news

ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்

news

புதுச்சேரியில் இன்று வேட்புமனு தாக்கல் கடைசி நாள்...நொடிக்கு நொடி மாறும் அரசியல் களம்

news

27 நட்சத்திரங்களும் அதற்குரிய சித்தர்களும்!

news

தமிழகம் வாழ வேண்டும் என்றால்... திமுக வீழ வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

news

தொடர் சரிவில் தங்கம் விலை... இன்றும் சரவனுக்கு ரூ.5,840 குறைவு!

news

தேமுதிக.,வுக்கு எத்தனை சீட்? மாவட்டச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை

news

திமுக தரும் 5 தொகுதிகளை ஏற்பதா? வேண்டாமா? சிபிஎம் அவசர ஆலோசனை

அதிகம் பார்க்கும் செய்திகள்