சென்னை: நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து ஜூன் 24ஆம் தேதி மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.
இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. கடந்த மே 5ஆம் தேதி இந்த ஆண்டுக்கான தேர்வு நடந்தது. தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதினர். இதற்கான முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட மொத்தம் நாடு முழுவதும் 67 மாணவர்கள் முதலிடம் பிடித்ததாக தகவல்கள் வெளியானது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மும்பையில் நீட் தேர்வு எழுதிய ராஜஸ்தானைச் சேர்ந் த 20 வயது மாணவி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த மாணவி மீது மும்பை போலீசார் வழக்கு தொடுத்தனர். பின்னர் ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்டது. தொடர் விசாரணையின் போது ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து நீட் தேர்வில் விடைத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், ஆள் மாறாட்டம் செய்தது, ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த பல மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தது, உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கருணை மதிப்பெண்கள் வழங்கியதை கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது. மறுபக்கம், மத்திய அரசு நீட் தேர்வில் எந்த குளறுபடியும் நடைபெறவில்லை என கூறி வருகிறது.
இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ஜூன் 24ஆம் தேதி காலை 9 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. திமுக மாணவரணி செயலாளர் சி வி எம் பி எழிலரசன், தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வு முறைகேடு குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நீட் தேர்வு முறைகேடு என்பது தொடர்கதையாக உள்ளது. நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்ட மசோதாவுக்கு உடனே ஒப்புதல் தர வேண்டும். தேர்வில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய மோசடிகள் மற்றும் குளறுபடிகள் களைவதற்கு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும் நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்ற பாஜக அரசின் எதேச்சதிகார போக்கிற்கு கண்டனம் தெரிவித்தும் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீழ்வது முடிவா.. அட அதுதாங்க ஆரம்பமே.. Falling is not the end!
கனவு .. யதார்த்தம்.. ஒரு அழகிய அனுபவம்.. A fantasy with a mermaid
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
Bollywood is Back: பாலிவுட்டின் பிரம்மாண்ட எழுச்சி.. வசூல் வேட்டையில் பார்டர் 2 மற்றும் துரந்தர்!
மகாராஷ்டிரா துணை முதல்வராக சுனேத்ரா பவார் இன்று மாலை பதவியேற்பு
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
வலி இல்லாமல் வழி பிறக்காது.. Protect Yourself From Your Thoughts
{{comments.comment}}