சென்னை: நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து ஜூன் 24ஆம் தேதி மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.
இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. கடந்த மே 5ஆம் தேதி இந்த ஆண்டுக்கான தேர்வு நடந்தது. தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதினர். இதற்கான முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட மொத்தம் நாடு முழுவதும் 67 மாணவர்கள் முதலிடம் பிடித்ததாக தகவல்கள் வெளியானது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மும்பையில் நீட் தேர்வு எழுதிய ராஜஸ்தானைச் சேர்ந் த 20 வயது மாணவி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த மாணவி மீது மும்பை போலீசார் வழக்கு தொடுத்தனர். பின்னர் ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்டது. தொடர் விசாரணையின் போது ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து நீட் தேர்வில் விடைத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், ஆள் மாறாட்டம் செய்தது, ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த பல மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தது, உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கருணை மதிப்பெண்கள் வழங்கியதை கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது. மறுபக்கம், மத்திய அரசு நீட் தேர்வில் எந்த குளறுபடியும் நடைபெறவில்லை என கூறி வருகிறது.
இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ஜூன் 24ஆம் தேதி காலை 9 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. திமுக மாணவரணி செயலாளர் சி வி எம் பி எழிலரசன், தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வு முறைகேடு குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நீட் தேர்வு முறைகேடு என்பது தொடர்கதையாக உள்ளது. நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்ட மசோதாவுக்கு உடனே ஒப்புதல் தர வேண்டும். தேர்வில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய மோசடிகள் மற்றும் குளறுபடிகள் களைவதற்கு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும் நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்ற பாஜக அரசின் எதேச்சதிகார போக்கிற்கு கண்டனம் தெரிவித்தும் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}