சென்னை: நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து ஜூன் 24ஆம் தேதி மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.
இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. கடந்த மே 5ஆம் தேதி இந்த ஆண்டுக்கான தேர்வு நடந்தது. தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதினர். இதற்கான முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட மொத்தம் நாடு முழுவதும் 67 மாணவர்கள் முதலிடம் பிடித்ததாக தகவல்கள் வெளியானது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மும்பையில் நீட் தேர்வு எழுதிய ராஜஸ்தானைச் சேர்ந் த 20 வயது மாணவி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த மாணவி மீது மும்பை போலீசார் வழக்கு தொடுத்தனர். பின்னர் ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்டது. தொடர் விசாரணையின் போது ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து நீட் தேர்வில் விடைத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், ஆள் மாறாட்டம் செய்தது, ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த பல மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தது, உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கருணை மதிப்பெண்கள் வழங்கியதை கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது. மறுபக்கம், மத்திய அரசு நீட் தேர்வில் எந்த குளறுபடியும் நடைபெறவில்லை என கூறி வருகிறது.
இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ஜூன் 24ஆம் தேதி காலை 9 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. திமுக மாணவரணி செயலாளர் சி வி எம் பி எழிலரசன், தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வு முறைகேடு குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நீட் தேர்வு முறைகேடு என்பது தொடர்கதையாக உள்ளது. நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்ட மசோதாவுக்கு உடனே ஒப்புதல் தர வேண்டும். தேர்வில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய மோசடிகள் மற்றும் குளறுபடிகள் களைவதற்கு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும் நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்ற பாஜக அரசின் எதேச்சதிகார போக்கிற்கு கண்டனம் தெரிவித்தும் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}