நேபாள வெள்ளப்பெருக்கு: கைலாஷ் யாத்திரை சென்ற 22 தமிழர்கள் பத்திரமாக மீட்பு

Aug 26, 2026,04:07 PM IST

காத்மண்டு : நேபாள நாட்டில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த யாத்ரீகர்களில் 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் இன்னும் 30-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணியில் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் பின்னணி :


இமயமலைச் சாரலில் அமைந்துள்ள நேபாள நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே திடீர் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 57 பேர் ஆன்மீகப் பயணமாக நேபாளம் வழியாகக் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றுள்ளனர். அவர்கள் பயணம் செய்த பாதையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் யாத்ரீகர்கள் சிக்கிக்கொண்டனர்.


மீட்பு நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலை




வெள்ளப்பெருக்கு குறித்துத் தகவல் அறிந்ததும், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.


மீட்கப்பட்டவர்கள்: முதற்கட்டமாகச் சிக்கியிருந்த 57 பேரில் 22 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


சிக்கியுள்ளவர்கள்: வெள்ள பாதிப்புப் பகுதியில் இன்னும் 30-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழக அரசின் உடனடி நடவடிக்கை


நேபாளத்தில் தமிழர்கள் சிக்கிய செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் ‘வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை’ உடனடியாகச் செயல்பாட்டில் இறங்கியுள்ளது.மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அதிகாரிகள் தொடர் தொடர்பில் இருந்து வருகின்றனர். எஞ்சியுள்ள 30-க்கும் மேற்பட்ட தமிழர்களையும் துரிதமாக மீட்டு, அவர்களுக்கான உணவு, இருப்பிடம் மற்றும் முதலுதவி சிகிச்சை வசதிகளைச் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


அத்துடன், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல்களைத் தெரிவிக்கவும், நிலைமையைக் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


அதோடு, நேபாளம் பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கான உதவி எண்களை அயலக தமிழர் நல துறை அறிவித்துள்ளது.


Toll-Free Phone Numbers

India: 1800 309 3793


For Overseas Contacts

To contact: +91 8069009901 / 08069009901

Missed call: +91 8069009900 / 08069009900

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேட்டூர் அணை திறப்பு...சேலம் செல்கிறாரா முதல்வர் விஜய்? அதிகாரிகள் திடீர் ஆய்வு

news

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து...நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்

news

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு.. இந்த அறிகுறிகள் இருந்தால்.. காதாரத்துறை எச்சரிக்கை

news

குழந்தை பெற்றால் ரூ.55 லட்சம் நிதியுதவி...பிறப்பு விகிதத்தை உயர்த்த சிங்கப்பூர் அரசு அதிரடி

news

சென்னை மழை முன்னெச்சரிக்கை பணிகள்: 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

news

நேபாள வெள்ளப்பெருக்கு: கைலாஷ் யாத்திரை சென்ற 22 தமிழர்கள் பத்திரமாக மீட்பு

news

திருஞானசம்பந்தருக்கு முத்துப் பல்லாக்கு கொடுக்கச் சொன்ன சிவபெருமான்!

news

THE LIGHT HOUSE.. ச.ப.அம்புஜாவின் கவிதைத் துளிகள்!

news

வள்ளிமயிலும்.. கேஸ் கம்பெனியின் eKYC யும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்