நேபாளத்தில் கனமழை.. வெள்ளத்தில் அடித்துச் சென்ற 2 பேருந்துகள்.. 63 பயணிகளின் கதி என்ன?

Jul 12, 2024,10:35 AM IST

காத்மாண்டு: நேபாளத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பயணம் செய்த 63 பேரும் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த ஒரு வாரமாக வட மாநிலங்களில் கன மழை மிரட்டி வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நேபாள நாட்டிலும்  தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

 



மத்திய நேபாளத்தில் உள்ள மடன் அஸ்திரி நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் சென்று கொண்டிருந்தது. அப்போது கன மழை காரணமாக, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகளும் சிக்கிக் கொண்டது.

இதனிடையே திசுலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட இரண்டு பேருந்துகளும்

அடித்துச் செல்லப்பட்டன. ஓட்டுநர்கள் உள்பட மொத்தம் 63 பேர் அந்தப் பேருந்துகளில் இருந்ததாக தெரிகிறது.

 

63 பயணிகளையும் தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக காத்மாண்டு  மற்றும் பரத்பூர் இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக பரத்பூர் மற்றும் சித்வான் நகரங்களுக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் இன்று செல்லாது எனவும் அறிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்