Earthquake: கிடுகிடுன்னு அதிர்ந்த டெல்லி.. மக்கள் பீதி.. ஆபத்தில்லை!

Oct 15, 2023,05:12 PM IST
டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

அக்டோபர் 3ம் தேதிதான் இதேபோன்ற ஒரு நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட தேசிய தலைநகரப் பகுதிகளை தாக்கியது. அதேபோன்றதொரு நிலநடுக்கம் இன்றும் உணரப்பட்டது.

இன்றைய நிலநடுக்கத்தின் மையமானது, ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் இருந்தது. பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அளவு 3. 1 ரிக்டராக இருந்தது. மாலை 4 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.



இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான நடுக்கத்தை மக்கள் உணர்ந்தனர். இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால் சில விநாடிகளே இந்த நிலநடுக்கம் நீடித்தது. பின்னர் இயல்பு நிலை திரும்பியது. நிலநடுக்கத்தால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

அடிக்கடி டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் இதை வைத்து பலரும் மீம்ஸ் போட்டு டிவிட்டரில் கலாய்த்துக் கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யை அப்பாவாக.. அண்ணனாக.. எங்கள் உயிராக நினைக்கிறோம்.. MLA வேல்முருகனுக்கு பதில் அளித்த மாணவி!

news

அதிசயம் ஆனால் உண்மை... நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்கு தெரியவில்லை: விஷ்வாஸ் குமார் ரமேஷ்!

news

ஜூலை 25 முதல் 100 நாள்.. மக்கள் உரிமை மீட்புப் பயணம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

news

என் மூச்சுக் காற்று இருக்கும் வரை நானே பாமக தலைவர்: டாக்டர் ராமதாஸ் திட்டவட்டம்!

news

காமராஜர், இளைய காமராஜர்னு சொல்லாதீங்க - தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்!

news

சென்னை கோயம்பேடு சந்தை: இன்றைய காய்கறிகளின் விலை எவ்வளவு தெரியுமா?

news

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை...ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1560 உயர்வு!

news

ஈரானின் அணு சக்தி நிலையங்களைக் குறி வைத்து அதிரடி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. பெரும் பதட்டம்

news

வெள்ளிக்கிழமைகளில்.. வைபவ லட்சுமி பூஜை வழிபாடு மிகவும் சிறந்தது!

அதிகம் பார்க்கும் செய்திகள்