Earthquake: கிடுகிடுன்னு அதிர்ந்த டெல்லி.. மக்கள் பீதி.. ஆபத்தில்லை!

Oct 15, 2023,05:12 PM IST
டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

அக்டோபர் 3ம் தேதிதான் இதேபோன்ற ஒரு நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட தேசிய தலைநகரப் பகுதிகளை தாக்கியது. அதேபோன்றதொரு நிலநடுக்கம் இன்றும் உணரப்பட்டது.

இன்றைய நிலநடுக்கத்தின் மையமானது, ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் இருந்தது. பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அளவு 3. 1 ரிக்டராக இருந்தது. மாலை 4 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.



இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான நடுக்கத்தை மக்கள் உணர்ந்தனர். இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால் சில விநாடிகளே இந்த நிலநடுக்கம் நீடித்தது. பின்னர் இயல்பு நிலை திரும்பியது. நிலநடுக்கத்தால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

அடிக்கடி டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் இதை வைத்து பலரும் மீம்ஸ் போட்டு டிவிட்டரில் கலாய்த்துக் கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்