Earthquake: கிடுகிடுன்னு அதிர்ந்த டெல்லி.. மக்கள் பீதி.. ஆபத்தில்லை!

Oct 15, 2023,05:12 PM IST
டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

அக்டோபர் 3ம் தேதிதான் இதேபோன்ற ஒரு நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட தேசிய தலைநகரப் பகுதிகளை தாக்கியது. அதேபோன்றதொரு நிலநடுக்கம் இன்றும் உணரப்பட்டது.

இன்றைய நிலநடுக்கத்தின் மையமானது, ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் இருந்தது. பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அளவு 3. 1 ரிக்டராக இருந்தது. மாலை 4 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.



இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான நடுக்கத்தை மக்கள் உணர்ந்தனர். இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால் சில விநாடிகளே இந்த நிலநடுக்கம் நீடித்தது. பின்னர் இயல்பு நிலை திரும்பியது. நிலநடுக்கத்தால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

அடிக்கடி டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் இதை வைத்து பலரும் மீம்ஸ் போட்டு டிவிட்டரில் கலாய்த்துக் கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்