- மஞ்சுளா தேவி
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து தமிழகம் முழுவதும் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. தமிழக அரசு தீபாவளி பண்டிகைக்காக நமக்கு எப்படி இரண்டு நாட்கள் விடுமுறை கொடுத்ததோ .. அது போல் மழையும் இரண்டு நாட்கள் விடுமுறை கொடுத்தது. தற்போது மீண்டும் கன மழை தொடங்கியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலெடுக்க சுழற்சி நிலவி வந்தது. இது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இது நாளை மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்ய கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும். மேலும் வருகின்ற 17ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கன மழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை காரணமாக தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற உள்ள பட்டயத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற உள்ள பட்டய தேர்வுகள் மற்றும் டிப்ளமோ போன்ற தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த விபரம் https://dte.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}