சென்னை: நாடு முழுவதும் பாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பயனாளர்களின் வசதிக்காக கொண்டு வரப்பட்டது தான் பாஸ்டேக் வசதி. டோல்கேட்டில் அதிக நேரம் பயனாளர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க கொண்டு வரப்பட்டதே பாஸ்டேக் வசதி. அதன்படி, சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் பயன்படுத்துவதினால் காத்திருப்பு நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது காத்திருப்பு நேரம் வெறும் 47 வினாடிகளாக குறைந்துள்ளது. இது முந்தைய 714 வினாடி காத்திருப்பில் இருந்து கணிசமாக முன்னேற்றம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அமைப்புதான் இந்த கட்டண முறையை நிர்வகித்து வருகிறது. பிப்ரவரி 17ம் தேதி முதல் அதாவது இன்று முதல் புதிய விதி முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சுங்கச்சாவடிகளில் அபராதங்களைத் தவிர்க்க, புதிய விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய பாஸ் டேக் விதிமுறைகள்:

பாஸ்டேக்கில் லோ பேலன்ஸ் இருந்தால், எல்லா டோல் கேட்டிலும் இனி ரீசார்ஜ் செய்ய முடியாது. அதுமட்டுமின்றி சிலருக்கு லோ பேலன்ஸ் காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால், டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே ரீசார்ஜ் செய்ய வேண்டுமாம். அதாவது பாஸ்டேக் அருகே நின்று ரீ சார்ஜ் செய்தால் அதை டோல்கேட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கே ஒய் சி காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால், டோல் கேட்டிற்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே அதை சரி செய்ய வேண்டும். பிளாக் லிஸ்ட்டிலிருந்து நீக்கப்படாத வாகனங்களின் பாஸ்டேக் ஏற்றுக்கொள்ளப்படாது.
வாகனங்களுக்கு சட்ட ரீதியிலான வழக்கு மற்றும் சிக்கல் இருந்து பாஸ்டேக் பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால் அதை ஒரு மணி நேரத்திற்கு முன்பே சரி செய்திருக்க வேண்டும்.
பாஸ்டேக் 5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதை உடனே நீக்க வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் 3 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதில் உடனே கேஒய்சி மாற்ற வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31 வரை அவகாசம் உண்டு.
பாஸ் டேக் வாகனத்தின் முன் ஒட்டப்பட வேண்டும். இல்லையென்றால் இரட்டை தொகை கட்ட வேண்டுமாம்.
அபராதங்களை தவிர்க்க செய் வேண்டியவைகள்:
அபராதங்களை தவிர்க்க பயணங்களைத் தொடங்குவதற்கு முன்பு, பாஸ்டேக்கில் போதிய பணயிருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும்,பயனர்களின் விவரங்களை அவ்வப்போது பதிவு செய்து அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Bangladesh in Tears: வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் காலிதா ஜியா காலமானார்
vaikunta Ekadashi 2025 கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு
பெரியார் வழியில் ராகுல்.. சில காங். தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். வழியில்.. ஆளூர் ஷாநவாஸ்
திருப்பதி கோவிலில் இன்று முதல் சர்வ தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தம்:திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
Thoothukudi Airport.. தூத்துக்குடி விமான நிலைய பெயரை மாற்ற அமைச்சர் எல். முருகன் கோரிக்கை
நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!
அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்
பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
{{comments.comment}}