வாகன ஓட்டிகளே அலார்ட்டா இருங்க... பாஸ்ட் டேக்கின் புதிய விதிமுறைகள்..இன்று முதல் அமல்!

Feb 17, 2025,03:55 PM IST

சென்னை: நாடு முழுவதும் பாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. 


பயனாளர்களின் வசதிக்காக கொண்டு வரப்பட்டது தான் பாஸ்டேக் வசதி. டோல்கேட்டில் அதிக நேரம் பயனாளர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க கொண்டு வரப்பட்டதே பாஸ்டேக் வசதி. அதன்படி, சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் பயன்படுத்துவதினால் காத்திருப்பு நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது காத்திருப்பு நேரம் வெறும் 47 வினாடிகளாக குறைந்துள்ளது. இது முந்தைய 714 வினாடி காத்திருப்பில் இருந்து கணிசமாக முன்னேற்றம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அமைப்புதான் இந்த கட்டண முறையை நிர்வகித்து வருகிறது. பிப்ரவரி 17ம் தேதி முதல் அதாவது இன்று முதல் புதிய விதி முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சுங்கச்சாவடிகளில் அபராதங்களைத் தவிர்க்க, புதிய விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


புதிய பாஸ் டேக் விதிமுறைகள்:




பாஸ்டேக்கில் லோ பேலன்ஸ் இருந்தால், எல்லா டோல் கேட்டிலும் இனி ரீசார்ஜ் செய்ய முடியாது. அதுமட்டுமின்றி சிலருக்கு லோ பேலன்ஸ் காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால், டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே ரீசார்ஜ் செய்ய வேண்டுமாம். அதாவது பாஸ்டேக் அருகே நின்று ரீ சார்ஜ் செய்தால் அதை டோல்கேட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


கே ஒய் சி காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால், டோல் கேட்டிற்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே அதை சரி செய்ய வேண்டும். பிளாக் லிஸ்ட்டிலிருந்து நீக்கப்படாத வாகனங்களின் பாஸ்டேக் ஏற்றுக்கொள்ளப்படாது. 


வாகனங்களுக்கு சட்ட ரீதியிலான வழக்கு மற்றும் சிக்கல் இருந்து பாஸ்டேக் பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால் அதை ஒரு மணி நேரத்திற்கு முன்பே சரி செய்திருக்க வேண்டும்.


பாஸ்டேக் 5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதை உடனே நீக்க வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் 3 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதில் உடனே கேஒய்சி மாற்ற வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31 வரை அவகாசம் உண்டு. 


பாஸ் டேக் வாகனத்தின் முன் ஒட்டப்பட வேண்டும். இல்லையென்றால் இரட்டை தொகை கட்ட வேண்டுமாம்.


அபராதங்களை தவிர்க்க செய் வேண்டியவைகள்:


அபராதங்களை தவிர்க்க பயணங்களைத் தொடங்குவதற்கு முன்பு, பாஸ்டேக்கில் போதிய பணயிருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும்,பயனர்களின் விவரங்களை அவ்வப்போது பதிவு செய்து அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் கொலை வழக்கு.. யாரும் தப்ப முடியாது.. முதல்வர் மு க ஸ்டாலின்

news

வெயிலுக்கு ஒரு குட்டி பிரேக்.. தமிழ்நாட்டில் இன்று முதல் 25ஆம் தேதி வரை.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

Chennai corporation budget: ரூ.5,145.52 கோடி பட்ஜெட்.. மேயர் பிரியா வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றுங்கள்.. அமைச்சர் துரைமுருகன் உத்தரவு

news

நண்பா நீ விளையாடு.. நான் அம்பயரிங் பண்றேன்.. IPL Umpire ஆன விராட் கோலியின் டீம் மேட்!

news

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்க: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!

news

Chennai MTC.. ஏசி பஸ் உட்பட அனைத்து பேருந்துகளிலும்.. இனி ரூ.2000/- மாதாந்திர சலுகை பாஸ்!

news

தெரு நாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை .. மேயர் பிரியாவுக்கு கார்த்தி சிதம்பரம் கோரிக்கை

news

முடிந்தது 9 மாத தவிப்பு.. தரையிறங்கிய டிராகன்.. புன்னகையுடன் பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்