டெல்லி: ஜூலை 1 முதல் இந்திய ரயில்வே ரயில் டிக்கெட் கட்டண உயர்வை அமல்படுத்துகிறது. 2020ம் ஆண்டுக்குப் பிறகு ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
ரயில் கட்டண உயர்வு மட்டுமல்லாமல், காத்திருப்புப் பட்டியல் வரம்பை உயர்த்துவது, முன்பதிவு அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவது, தட்கல் முன்பதிவுகளுக்கு ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பை கட்டாயமாக்குவது மற்றும் சிறிய கட்டண மாற்றங்களைச் செய்வது ஆகியவை இதில் அடங்கும்.
இந்த மாற்றங்கள் ரயில்வே முன்பதிவு முறையை ஒழுங்குபடுத்தவும், அதிக தேவை உள்ள டிக்கெட்டுகளை நியாயமான முறையில் வழங்கவும், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முன்பதிவு முறைக்கு மாறவும் உதவும்.
ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் :

- தூரப் பயணங்களுக்கான கட்டண உயர்வை ரயில்வே நாளை முதல் அமல்படுத்துகிறது. 2020 க்குப் பிறகு முதல் முறையாக கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி. Non-AC மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.0.01 உயரும். AC கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.0.02 உயரும்.
புறநகர் ரயில் கட்டணங்கள், 500 கி.மீ தூரத்திற்குள் உள்ள இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் மற்றும் மாதாந்திர சீசன் பாஸ்களில் எந்த மாற்றமும் இல்லை.
500 கி.மீ., தூரத்திற்குள் உள்ள 2ம் வகுப்பு டிக்கெட்களுக்கு ரூ.5 கட்டணமும், 501 முதல் 1500 கி.மீ., வரையிலான பயணத்திற்கு ரூ.10 கட்டணமும், 1501 முதல் 2500 வரையிலான பயணத்திற்கு ரூ. 15 கட்டணமும் உயர்த்தப்படுகிறது.
- AC காத்திருப்புப் பட்டியல் 25% லிருந்து 60% ஆக உயர்வு: ஏசி கோச்சுகளுக்கான காத்திருப்புப் பட்டியல் வரம்பு 25% ஆக இருந்தது. இது தற்போது 60% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஏசி பெட்டிகளில் அதிக இடங்கள் காலியாக இருந்ததாலும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்தையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- Non-AC காத்திருப்புப் பட்டியல் 30% ஆக நிர்ணயம்: ஏசி அல்லாத ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் காத்திருப்புப் பட்டியல் 30% ஆக இருக்கும். இது அதிக அளவில் பயன்படுத்தப்படும் பெட்டிகளில் தேவையை பூர்த்தி செய்யும். அதே நேரத்தில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இருக்கும்.
- முதல் முன்பதிவு சார்ட் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு தயார்: ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு முதல் முன்பதிவு பட்டியல் வெளியிடப்படும். முன்பு இது 4 மணி நேரத்திற்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த மாற்றம் ஏற்கனவே சில ரயில்களில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இது அனைத்து ரயில்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
- தட்கல் முன்பதிவுகளுக்கு ஆதார் கட்டாயம்: ஜூலை 1 முதல், ஆன்லைனில் அல்லது PRS (Passenger Reservation System) கவுண்டர்களில் செய்யப்படும் அனைத்து தட்கல் முன்பதிவுகளுக்கும் ஆதார் இணைக்கப்பட்ட User ID பயன்படுத்தப்பட வேண்டும். ஜூலை 15 முதல், பயணிகளின் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அந்த OTPயை உள்ளீடு செய்த பிறகுதான் முன்பதிவு முழுமையடையும்.
- தட்கல் முன்பதிவு தொடங்கிய 30 நிமிடங்களுக்கு ஏஜெண்டுகளுக்கு அனுமதி இல்லை: தட்கல் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்வதை தடுக்கவும், தனிப்பட்ட பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், தட்கல் முன்பதிவு தொடங்கிய முதல் 30 நிமிடங்களுக்கு ஏஜெண்டுகள் தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியாது.
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
{{comments.comment}}