சென்னை: ஆங்கிலப் புத்தாண்டு 2024 இன்று நள்ளிரவு பிறப்பதையொட்டி புத்தாண்டைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். கூடவே காவல்துறையும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளுடன் மக்கள் பாதுகாப்பான முறையில் புத்தாண்டைக் கொண்டாட ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இன்று டிசம்பர் 31ம் தேதி.. விடிந்தால் 2024ம் ஆண்டு பிறக்கிறது. புத்தாண்டு பிறப்பதையொட்டி சென்னை மாநகர காவல்துறை பல்வேறு ஏற்பாடுகளுடன் அசத்தலாக மக்கள் சேவையாற்ற காத்திருக்கிறது.

புத்தாண்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று சென்னை மாநகர காவல்துரையின் வடக்கு, தெற்கு மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையர்கள் செய்தியாளர்களிடம் அதுகுறித்து எடுத்துரைத்தனர். பொதுமக்கள் காவல்துறையின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்குமாறும், விதி மீறல்களில் ஈடுபடாமல் முழுமையாக புத்தாண்டைக் கொண்டாடுமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
சென்னை காவல்துறை புத்தாண்டையொட்டி ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் விவரம்:

பொதுமக்கள் காவல்துறை வழிகாட்டுதல்களை முழுமையாக கடைப்பிடித்து புத்தாண்டை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை மக்களிடம் அன்பான கோரிக்கை வைத்துள்ளது.
பிறகென்ன மக்களே.. இவ்வளவு அற்புதமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செஞ்சு கொடுத்திருக்காங்க. அவங்க சொல்படி கேட்டு நடந்துகிட்டு, ஜாலியா புத்தாண்டைக் கொண்டாடலாம் வாங்க!
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}