விவேகத்துடன் செயல்பட்டு வெற்றியை வசமாக்கும் மகர ராசிக்காரர்களே பிறக்க போகும் 2025ம் ஆண்டு உங்களுக்கு ஏற்றம், இறக்கம் என அனைத்தும் கலந்த வருடமாக இருக்கும். நல்ல விஷயங்கள் தேடி வரும் சமயத்தில் தேவையற்ற பேச்சுக்களால் வாய்ப்புகளை இழந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் பல காலமாக கண்ட கனவுகள் நனவாகலாம். இடமாற்றம். பதவி உயர்வு ஆகியவை விருப்பம் போல் ஈடேறும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பழைய விரோதத்தை மனதில் வைத்து யாருடனும் பகைமை பாராட்ட வேண்டாம்.
சட்டங்களை மதித்து நடப்பது நல்லது. கோப்புகளை கையாளும் போதும், பயணத்தின் போதும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் வளர்ச்சி ஏற்படும். குழந்தைகளால் பெருமை சேரும். குடும்பத்திலும் மற்றவர்களிடமும் மகிழ்ச்சி நிலைத்திருக்க குதர்க்கமான பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். வீடு, வாகனங்களை புதுப்பிக்க யோகம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக கையாள வேண்டும்.
நிதி நிலைமை நன்றாக இருக்கும். பணத்தை சேமிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணத்தை கையாள்வதில் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொழிலில் சாதகமான நிலை இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிலும் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.
வாழ்க்கை துணையுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். தம்பதிகள் புரிதலை வளர்த்துக் கொள்வது நன்மை. கடந்த ஆண்டை விட நல்ல பலன்களையே இந்த ஆண்டில் எதிர்பார்க்கலாம்.
தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கைகூடும். கடன் விஷயங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு சீரான வளர்ச்சி இருக்கும். யாரை பற்றியும் குறை கூறாமல் இருப்பது உங்கள் மீதான மகிழ்ச்சியை அதிகரிக்கும். அரசுத்துறையில் இருப்பவர்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும். பொது இடங்களில் நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள்.
கலைதுறையினருக்கு நல்ல செய்திகள் தேடி வரும். மாணவர்கள் நட்பு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனத்தில் அதிக வேகத்தை தவிர்ப்பது நல்லது. நரம்பு, ஒற்றை தலைவலி, கழுத்து பிரச்சனைகள் ஏற்படலாம்.
பரிகாரம் : பெருமாளையும், தாயாரையம் சேர்த்து வழிபடுவதால் பெருமைகள் அதிகரிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் வெளியானது.. தேர்ச்சி விகிதம் மொத்தம் 92.09% !
தமிழ்நாட்டில்.. மே மாத இறுதியில் கோடை வெயில்.. இயல்பை விட குறையும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
தமிழகத்தில் 10வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.. வழக்கம் போல மாணவியரே அதிகம் பாஸ்!
பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!
என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு
cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்
இந்தியாவில் அமலுக்கு வந்தது.. பயோ மெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட்..!
{{comments.comment}}