விவேகத்துடன் செயல்பட்டு வெற்றியை வசமாக்கும் மகர ராசிக்காரர்களே பிறக்க போகும் 2025ம் ஆண்டு உங்களுக்கு ஏற்றம், இறக்கம் என அனைத்தும் கலந்த வருடமாக இருக்கும். நல்ல விஷயங்கள் தேடி வரும் சமயத்தில் தேவையற்ற பேச்சுக்களால் வாய்ப்புகளை இழந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் பல காலமாக கண்ட கனவுகள் நனவாகலாம். இடமாற்றம். பதவி உயர்வு ஆகியவை விருப்பம் போல் ஈடேறும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பழைய விரோதத்தை மனதில் வைத்து யாருடனும் பகைமை பாராட்ட வேண்டாம்.
சட்டங்களை மதித்து நடப்பது நல்லது. கோப்புகளை கையாளும் போதும், பயணத்தின் போதும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் வளர்ச்சி ஏற்படும். குழந்தைகளால் பெருமை சேரும். குடும்பத்திலும் மற்றவர்களிடமும் மகிழ்ச்சி நிலைத்திருக்க குதர்க்கமான பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். வீடு, வாகனங்களை புதுப்பிக்க யோகம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக கையாள வேண்டும்.

நிதி நிலைமை நன்றாக இருக்கும். பணத்தை சேமிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணத்தை கையாள்வதில் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொழிலில் சாதகமான நிலை இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிலும் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.
வாழ்க்கை துணையுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். தம்பதிகள் புரிதலை வளர்த்துக் கொள்வது நன்மை. கடந்த ஆண்டை விட நல்ல பலன்களையே இந்த ஆண்டில் எதிர்பார்க்கலாம்.
தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கைகூடும். கடன் விஷயங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு சீரான வளர்ச்சி இருக்கும். யாரை பற்றியும் குறை கூறாமல் இருப்பது உங்கள் மீதான மகிழ்ச்சியை அதிகரிக்கும். அரசுத்துறையில் இருப்பவர்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும். பொது இடங்களில் நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள்.
கலைதுறையினருக்கு நல்ல செய்திகள் தேடி வரும். மாணவர்கள் நட்பு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனத்தில் அதிக வேகத்தை தவிர்ப்பது நல்லது. நரம்பு, ஒற்றை தலைவலி, கழுத்து பிரச்சனைகள் ஏற்படலாம்.
பரிகாரம் : பெருமாளையும், தாயாரையம் சேர்த்து வழிபடுவதால் பெருமைகள் அதிகரிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}