ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மகரம் ராசி.. குடும்பத்தில் வளர்ச்சி .. குழந்தைகளால் பெருமை!

Dec 21, 2024,05:58 PM IST

விவேகத்துடன் செயல்பட்டு வெற்றியை வசமாக்கும் மகர ராசிக்காரர்களே பிறக்க போகும் 2025ம் ஆண்டு உங்களுக்கு ஏற்றம், இறக்கம் என அனைத்தும் கலந்த வருடமாக இருக்கும். நல்ல விஷயங்கள் தேடி வரும் சமயத்தில் தேவையற்ற பேச்சுக்களால் வாய்ப்புகளை இழந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் பல காலமாக கண்ட கனவுகள் நனவாகலாம். இடமாற்றம். பதவி உயர்வு ஆகியவை விருப்பம் போல் ஈடேறும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பழைய விரோதத்தை மனதில் வைத்து யாருடனும் பகைமை பாராட்ட வேண்டாம்.


சட்டங்களை மதித்து நடப்பது நல்லது. கோப்புகளை கையாளும் போதும், பயணத்தின் போதும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் வளர்ச்சி ஏற்படும். குழந்தைகளால் பெருமை சேரும். குடும்பத்திலும் மற்றவர்களிடமும் மகிழ்ச்சி நிலைத்திருக்க குதர்க்கமான பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். வீடு, வாகனங்களை புதுப்பிக்க யோகம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக கையாள வேண்டும்.




நிதி நிலைமை நன்றாக இருக்கும். பணத்தை சேமிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணத்தை கையாள்வதில் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொழிலில் சாதகமான நிலை இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிலும் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். 


வாழ்க்கை துணையுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். தம்பதிகள் புரிதலை வளர்த்துக் கொள்வது நன்மை. கடந்த ஆண்டை விட நல்ல பலன்களையே இந்த ஆண்டில் எதிர்பார்க்கலாம்.


தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கைகூடும். கடன் விஷயங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு சீரான வளர்ச்சி இருக்கும். யாரை பற்றியும் குறை கூறாமல் இருப்பது உங்கள் மீதான மகிழ்ச்சியை அதிகரிக்கும். அரசுத்துறையில் இருப்பவர்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும். பொது இடங்களில் நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள். 


கலைதுறையினருக்கு நல்ல செய்திகள் தேடி வரும். மாணவர்கள் நட்பு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனத்தில் அதிக வேகத்தை தவிர்ப்பது நல்லது. நரம்பு, ஒற்றை தலைவலி, கழுத்து பிரச்சனைகள் ஏற்படலாம். 


பரிகாரம் : பெருமாளையும், தாயாரையம் சேர்த்து வழிபடுவதால் பெருமைகள் அதிகரிக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் பழனிச்சாமியின் வேலையாக இருக்கிறது: முதல்வர் தாக்கு!

news

விசாரித்தது சிபிஐ.. தீர்ப்பு வழங்கியது.. நீதிமன்றம்.. இதில் ஸ்டாலின் பங்கு என்ன?எடப்பாடி பழனிச்சாமி!

news

வார இறுதி நாட்கள்: சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

news

10,11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிட திட்டம்..மே 16ல் வெளியீடு..!

news

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு.. யாரும் உரிமை கோர முடியாது : விசிக தலைவர் திருமாவளவன்!

news

பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷா.. பத்திரமாக திரும்பினார்

news

தமிழக அரசு உழவர்களின் துயரத்தைப் போக்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

news

ஐபோன், ஐபேட்டில் பாதுகாப்பு குறைபாடா?...இந்திய அரசு விடுத்த புதிய எச்சரிக்கை

news

6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மைக்ரோசாஃப்ட்...காரணம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்