கருணை உள்ளமும், எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் தன்மையும், மனோதிடமும் கொண்ட மகர ராசிக்காரர்களே....உங்களுக்கு பிறக்க போகும் 2024 ம் ஆண்டு எப்படி இருக்கும்? என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அனைவரையும் அனுசரித்து போகக் கூடிய, தர்மத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத, ஞான சிந்தனையும், எதிர்கால சிந்தனையும் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு 2024 ம் ஆண்டு யோக பலன்கள், தெய்வ வழிபாடு, உல்லாச பயணங்கள் செல்வத என்று இருக்கும். உல்லாச பயணங்களால் மனமகிழ்ச்சி, மனதிருப்தி ஏற்படுவது என நல்ல பலன்கள் பல கிடைக்க போகின்றன. ஏழரை சனி நடந்தாலும், மகர ராசிக்கு சனி பகவான் ஆட்சி நாதன் என்பதால் நன்மையையே செய்வார்.
ராகு பகவான் இந்த ஆண்டு முழுவதுமே 3ம் பாவத்திலும், கேது பகவான் 9ம் பாவத்திலும் தான் இருக்க போகிறார்கள். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமையாக இருப்பதால் எந்த செயலை துவங்கினாலும் தடையில்லாமல் வெற்றி கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். சொந்த தொழில், அரசு வேலை ஆகியோருக்கு பணி நிரந்தரம் ஏற்படும். ஐடி துறை, அக்கவுண்ட்ஸ் துறை, சிவில் துறை இருப்பவர்களுக்கும் இந்த ஆண்டு அருமையாக இருக்க போகிறது.
மகர ராசிக்கு பாதகனான சூரிய பகவான் இருக்கும் 12ம் பாவத்தில், மே மாதம் 01ம் தேதியில் இருந்து குருவின் பார்வை விழுவதால் யோகமான பலன்கள் ஏற்படும். 4ம் பாவத்தில் இருக்கும் குரு பகவான் மே 01ம் தேதிக்கு பிறகு 05ம் பாவத்திற்கு சென்று விடுகிறார். அதற்கு முன்பு 9ம் பார்வையாக சூரிய பகவானை பார்ப்பதால் இந்த ஆண்டு நிச்சயம் மகர ராசிக்காரர்களுக்கு யோக பலன் உண்டு.
மகர ராசிக்காரர்கள் 2024ம் ஆண்டில், கர்ம வினைகளை போக்கக் கூடிய விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பு. "ஓம் கம் கணபதயே நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி விநாயகரை வழிபட்டு வாருங்கள். 108, 1008 என எத்தவை முறை முடியுமோ அத்தனை சொல்லலாம். விநாயகப் பெருமான் ஏழரை சனியால் ஏற்படம் கர்மாக்களை குறைப்பார். விநாயகர் கர்மவினைகளை வேரோடு அகற்றக் கூடியவர் என்பதால் இந்த ஆண்டில் அவரை வழிபடுவதால் கூடுதலான நல்ல பலன்களை பெற முடியும்.
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
{{comments.comment}}