நாம் தமிழர் கட்சி.. நிர்வாகிகள் வீட்டில்.. என் ஐ ஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. என்ன காரணம்?

Feb 02, 2024,10:47 AM IST

திருச்சி: வெளிநாடுகளில் இருந்து நாம் தமிழர் கட்சிக்கு நிதி வருவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். பலருக்கு நேரில் விசாரணைக்கு வருமாறு கூறி சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.


மக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. பல்வேறு கட்சிகளும் தீவிரமாகி வருகின்றன. இந்த நிலையில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு ஏஜென்சி உள்ளிட்டவற்றின் ரெய்டுகளும் ஒரு பக்கம் சூடு பிடித்துள்ளன. 


தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி தொடங்கியது முதலே தனித்துதான் போட்டியிட்டு வருகிறது. யாருடனும் அது சேருவதில்லை. அதை பாஜக பி டீம் என்றுதான் திமுக தொடர்ந்து கூறி வருகிறது. திமுக வாக்குகளைப் பிரிக்கவே நாம் தமிழர் கட்சியை  பயன்படுத்துவதாகவும் கூட திமுகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என்று சீமான் ஏற்கனவே அறிவித்து விட்டார். 40 தொகுதிகளில் 20 பெண்கள், 20 ஆண்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.




இந்த நிலையில் இன்றைய பொழுந்து நாம் தமிழர் கட்சிக்கு சோதனைப் பொழுதாக அமைந்து விட்டது. அதாவது அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் ரெய்டு நடத்தியுள்ளனர். 


கோவையில் 2 இடங்களிலும், சென்னை, திருச்சி, சிவகங்கை, மற்றும் தென்காசியில் தலா ஒரு இடங்களிலும் சோதனை நடந்துள்ளது.  நாம் தமிழர் கட்சியில் முக்கிய  பதவியில் இருப்பவர் சாட்டை துரைமுருகன். இவர் திருச்சி சண்முகாநகர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் சாட்டை துரைமுருகன் என்ற பெயரில் பிரபலமான யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் மூலமாக நாம் தமிழர் கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து என்ஐஏ அதிகாரிகள் திருச்சி சண்முகா நகரில் உள்ள சாட்டை துரைமுருகன்  வீட்டில் தீவிர விசாரணை நடத்தினர்.


வீட்டில் துரைமுருகன் இல்லை. அவரது மனைவி மாதரசியிடம் விசாரணை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 3 மணி நேர விசாரணைக்குப் பின்னர் சாட்டை துரைமுருகனை நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சம்மன் கொடுத்து விட்டுச் சென்றனர் அதிகாரிகள்.


நாம் தமிழர் கட்சிக்கு எவ்வளவு நிதி வருகிறது.. தனிப்பட்ட முறையில் சாட்டை முருகனுக்கு எவ்வளவு பணம் வருகிறது.. எந்த நாடுகளில் இருந்து பணம் வருகிறது..  யார் மூலமாக பணம் கிடைக்கிறது.. என்பது பற்றிய தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவையில் 2 இடங்களில் சோதனை நடந்த சோதனையில், ஒன்று காளப்பட்டி முருகன் வீட்டில் நடந்தது. இவரும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்தான்.   சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி விஷ்ணு பிரதாப் வீட்டில் நடந்த சோதனையில் ஒரு செல்போன் 7 புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


இதேபோல நாம் தமிழர் கட்சியின் இன்னொரு முக்கிய நிர்வாகியான இடும்பாவனம் கார்த்தியையும், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் தற்போது ஊரில் இல்லாததால், 5ம் தேதி விசாரணைக்கு வருவதாக கார்த்தி பதில் கொடுத்துள்ளார்.


நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் இன்று நடந்த அதிரடி சோதனை தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்