நாம் தமிழர் கட்சி.. நிர்வாகிகள் வீட்டில்.. என் ஐ ஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. என்ன காரணம்?

Feb 02, 2024,10:47 AM IST

திருச்சி: வெளிநாடுகளில் இருந்து நாம் தமிழர் கட்சிக்கு நிதி வருவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். பலருக்கு நேரில் விசாரணைக்கு வருமாறு கூறி சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.


மக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. பல்வேறு கட்சிகளும் தீவிரமாகி வருகின்றன. இந்த நிலையில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு ஏஜென்சி உள்ளிட்டவற்றின் ரெய்டுகளும் ஒரு பக்கம் சூடு பிடித்துள்ளன. 


தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி தொடங்கியது முதலே தனித்துதான் போட்டியிட்டு வருகிறது. யாருடனும் அது சேருவதில்லை. அதை பாஜக பி டீம் என்றுதான் திமுக தொடர்ந்து கூறி வருகிறது. திமுக வாக்குகளைப் பிரிக்கவே நாம் தமிழர் கட்சியை  பயன்படுத்துவதாகவும் கூட திமுகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என்று சீமான் ஏற்கனவே அறிவித்து விட்டார். 40 தொகுதிகளில் 20 பெண்கள், 20 ஆண்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.




இந்த நிலையில் இன்றைய பொழுந்து நாம் தமிழர் கட்சிக்கு சோதனைப் பொழுதாக அமைந்து விட்டது. அதாவது அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் ரெய்டு நடத்தியுள்ளனர். 


கோவையில் 2 இடங்களிலும், சென்னை, திருச்சி, சிவகங்கை, மற்றும் தென்காசியில் தலா ஒரு இடங்களிலும் சோதனை நடந்துள்ளது.  நாம் தமிழர் கட்சியில் முக்கிய  பதவியில் இருப்பவர் சாட்டை துரைமுருகன். இவர் திருச்சி சண்முகாநகர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் சாட்டை துரைமுருகன் என்ற பெயரில் பிரபலமான யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் மூலமாக நாம் தமிழர் கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து என்ஐஏ அதிகாரிகள் திருச்சி சண்முகா நகரில் உள்ள சாட்டை துரைமுருகன்  வீட்டில் தீவிர விசாரணை நடத்தினர்.


வீட்டில் துரைமுருகன் இல்லை. அவரது மனைவி மாதரசியிடம் விசாரணை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 3 மணி நேர விசாரணைக்குப் பின்னர் சாட்டை துரைமுருகனை நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சம்மன் கொடுத்து விட்டுச் சென்றனர் அதிகாரிகள்.


நாம் தமிழர் கட்சிக்கு எவ்வளவு நிதி வருகிறது.. தனிப்பட்ட முறையில் சாட்டை முருகனுக்கு எவ்வளவு பணம் வருகிறது.. எந்த நாடுகளில் இருந்து பணம் வருகிறது..  யார் மூலமாக பணம் கிடைக்கிறது.. என்பது பற்றிய தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவையில் 2 இடங்களில் சோதனை நடந்த சோதனையில், ஒன்று காளப்பட்டி முருகன் வீட்டில் நடந்தது. இவரும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்தான்.   சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி விஷ்ணு பிரதாப் வீட்டில் நடந்த சோதனையில் ஒரு செல்போன் 7 புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


இதேபோல நாம் தமிழர் கட்சியின் இன்னொரு முக்கிய நிர்வாகியான இடும்பாவனம் கார்த்தியையும், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் தற்போது ஊரில் இல்லாததால், 5ம் தேதி விசாரணைக்கு வருவதாக கார்த்தி பதில் கொடுத்துள்ளார்.


நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் இன்று நடந்த அதிரடி சோதனை தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்