கவிதாயினியின் இரவுகள்!

Dec 30, 2025,03:49 PM IST

- இரா.மும்தாஜ் பேகம்


பாட்டி பொட்டு வைத்தாள்

பால் நிலவே உன்னை கண்டு.

பாங்காய் தோசை சுட்டாள்

அம்மாவும் உன்னைக் கண்டு.

பல்லாங்குழி விளையாடும்போதும் 

பார்த்தேனே உன் வடிவம்.

இரவில் நடந்த போது என்னுடனே நீ வந்தாய்.

ஈறேழு நாட்களிலே

எங்கேயோ சென்றுவிட்டாய்,

தேடி அலைந்தேன் நான்.

தெரியவில்லை கண்களுக்கு

பதுங்கி, வெளியில் வந்தாய், பாட்டிமைக்கு மறுநாளே, பிறையாக....




ஓ நிலா பெண்ணே!

நடைப்பயிற்சி வந்தபோது

நான் ரசித்தேன் உன்னை.

இப்பொழுதும் சலிக்காமல் பார்க்கிறேன்.

ஜன்னல் வழியாக

தென்னங்கீற்று போல்

வளர்பிறையாய் வந்திருக்கிறாய்.


நான் ரசிக்கிறேன் என்றதும், பூரிப்பில்..… பருத்து,பருத்து

பௌர்ணமி ஆனாய்.

என்னே!உன் அழகு 

உன்னைக் கண்டு, நானும் பருத்தேன். சகிக்கவில்லை, 

அதெப்படி ஒரே மாதத்தில் ஒல்லியாகிப் போனாய்.

உன் தேகத்திற்கு,

வளர் பிறையும் அழகுதான்.

தேய் பிறையும் அழகுதான்.

தேய்பிறை மட்டுமே 

என் தேகத்திற்கு அழகு.

தெரிந்து கொண்டேன் உன்னைக் கண்டு. 


(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னைப் பற்றி அருவருப்பாக கீழ்த்தரமாக பேசுவதை நிறுத்துங்கள் - நடிகை திரிஷா

news

திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!

news

சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்

news

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி

news

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிரடி: தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

news

மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)

news

பிப்ரவரி 21ம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

குன்றின் மேல் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த 1008 லிங்கங்கள் கொண்ட சிவஸ்தலம்

news

சிவனே மகா சிவனே!

அதிகம் பார்க்கும் செய்திகள்