கவிதாயினியின் இரவுகள்!

Dec 30, 2025,03:49 PM IST

- இரா.மும்தாஜ் பேகம்


பாட்டி பொட்டு வைத்தாள்

பால் நிலவே உன்னை கண்டு.

பாங்காய் தோசை சுட்டாள்

அம்மாவும் உன்னைக் கண்டு.

பல்லாங்குழி விளையாடும்போதும் 

பார்த்தேனே உன் வடிவம்.

இரவில் நடந்த போது என்னுடனே நீ வந்தாய்.

ஈறேழு நாட்களிலே

எங்கேயோ சென்றுவிட்டாய்,

தேடி அலைந்தேன் நான்.

தெரியவில்லை கண்களுக்கு

பதுங்கி, வெளியில் வந்தாய், பாட்டிமைக்கு மறுநாளே, பிறையாக....




ஓ நிலா பெண்ணே!

நடைப்பயிற்சி வந்தபோது

நான் ரசித்தேன் உன்னை.

இப்பொழுதும் சலிக்காமல் பார்க்கிறேன்.

ஜன்னல் வழியாக

தென்னங்கீற்று போல்

வளர்பிறையாய் வந்திருக்கிறாய்.


நான் ரசிக்கிறேன் என்றதும், பூரிப்பில்..… பருத்து,பருத்து

பௌர்ணமி ஆனாய்.

என்னே!உன் அழகு 

உன்னைக் கண்டு, நானும் பருத்தேன். சகிக்கவில்லை, 

அதெப்படி ஒரே மாதத்தில் ஒல்லியாகிப் போனாய்.

உன் தேகத்திற்கு,

வளர் பிறையும் அழகுதான்.

தேய் பிறையும் அழகுதான்.

தேய்பிறை மட்டுமே 

என் தேகத்திற்கு அழகு.

தெரிந்து கொண்டேன் உன்னைக் கண்டு. 


(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!

news

இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

news

கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!

news

வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!

news

உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு

news

தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

news

DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!

news

"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

news

ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்