- இரா.மும்தாஜ் பேகம்
பாட்டி பொட்டு வைத்தாள்
பால் நிலவே உன்னை கண்டு.
பாங்காய் தோசை சுட்டாள்
அம்மாவும் உன்னைக் கண்டு.
பல்லாங்குழி விளையாடும்போதும்
பார்த்தேனே உன் வடிவம்.
இரவில் நடந்த போது என்னுடனே நீ வந்தாய்.
ஈறேழு நாட்களிலே
எங்கேயோ சென்றுவிட்டாய்,
தேடி அலைந்தேன் நான்.
தெரியவில்லை கண்களுக்கு
பதுங்கி, வெளியில் வந்தாய், பாட்டிமைக்கு மறுநாளே, பிறையாக....
ஓ நிலா பெண்ணே!
நடைப்பயிற்சி வந்தபோது
நான் ரசித்தேன் உன்னை.
இப்பொழுதும் சலிக்காமல் பார்க்கிறேன்.
ஜன்னல் வழியாக
தென்னங்கீற்று போல்
வளர்பிறையாய் வந்திருக்கிறாய்.
நான் ரசிக்கிறேன் என்றதும், பூரிப்பில்..… பருத்து,பருத்து
பௌர்ணமி ஆனாய்.
என்னே!உன் அழகு
உன்னைக் கண்டு, நானும் பருத்தேன். சகிக்கவில்லை,
அதெப்படி ஒரே மாதத்தில் ஒல்லியாகிப் போனாய்.
உன் தேகத்திற்கு,
வளர் பிறையும் அழகுதான்.
தேய் பிறையும் அழகுதான்.
தேய்பிறை மட்டுமே
என் தேகத்திற்கு அழகு.
தெரிந்து கொண்டேன் உன்னைக் கண்டு.
(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியை)
2026 குடியரசு தின விழா அணிவகுப்பில்.. தமிழ்நாட்டின் பசுமை மின் சக்தி ஊர்தி பங்கேற்பு
ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில்.. ஷெபாலி வர்மா அதிரடி உயர்வு.. 6வது இடம்!
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!
Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?
புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு
"பந்தயம் என்பது நடிப்பு அல்ல": அஜித் குமாரின் கார் பந்தய ஆவணப்படம் வெளியீடு
vaikunta Ekadashi 2025 கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு
{{comments.comment}}