உருவாகிறது நீலகிரி மாநகராட்சி .. 19 மாநகராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம்.. பிரமாண்டத் திட்டம்!

Sep 30, 2024,06:08 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் புதிதாக நீலகிரி மாநகராட்சி உருவாக்கப்படவுள்ளது. இதுதவிர தமிழ்நாட்டில் உள்ள 19 மாநகராட்சிகளுடன் பல்வேறு ஊராட்சி அமைப்புகள் சேர்க்கப்பட்டு அவற்றின் எல்லைகளும் விரிவுபடுத்தப்படவுள்ளன.


தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 25 மாநகராட்சிகள் உள்ளன. இதில் 19 மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்த மாநகராட்சிகளுக்கு அருகாமையில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை இணைக்கத் திட்டமிட்டு அதுகுறித்த திட்டம் வெளியாகியுள்ளது.




மொத்தம் 5 நகராட்சிகள், 45 பேரூராட்சிகள் மற்றும் 460 ஊராட்சிகளை இந்த 19 மாநகராட்சிகளுடன் அரசு இணைக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான விவரம்:


19 மாநகராட்சிகளுடன் இணைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கை:


4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 236 ஊராட்சிகள்


மாநகராட்சி வாரியாக இணைக்கப்படும் ஊராட்சி அமைப்புகள் குறித்த விவரம்:


தாம்பரம்  - 18 ஊராட்சிகள்

காஞ்சிபுரம் - 11 ஊராட்சிகள்

நாகர்கோவில் - 6 ஊராட்சிகள்

கரூர் - 6 ஊராட்சிகள்

ஓசூர் - 9 ஊராட்சிகள்

மதுரை - 1 பேரூராட்சி, 13 ஊராட்சிகள்

கோயம்பத்தூர் - 1 நகராட்சி,  4 பேரூராட்சி, 11 ஊராட்சிகள்

கடலூர் - 16 ஊராட்சிகள்

திண்டுக்கல் - 10 ஊராட்சிகள்

ஈரோடு - 7 ஊராட்சிகள்

சேலம் - 2 பேரூராட்சி, 5 ஊராட்சிகள்

கும்பகோணம் - 13 ஊராட்சிகள்

தஞ்சாவூர் - 14 ஊராட்சிகள்

தூத்துக்குடி - 7 ஊராட்சிகள்

திருச்சிராப்பள்ளி - 38 ஊராட்சிகள்

திருநெல்வேலி - 12 ஊராட்சிகள்

திருப்பூர் - 12 ஊராட்சிகள்

ஆவடி - 3 நகராட்சிகள், 19 ஊராட்சிகள்

சிவகாசி - 9 ஊராட்சிகள்


இதுதவிர 50 நகராட்சிகளுடன், 13 பேரூராட்சிகளும், 195 ஊராட்சிகளும் இணைக்கப்படவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதுதொடர்பான பட்டியலையும் அரசு வெளியிட்டுள்ளது.


நீலகிரி மாநகராட்சி உதயம்


இதுதவிர 17 மாவட்டங்களில் உருவாக்கப்படவுள்ள புதிய நகராட்சிகளில் 24 பேரூராட்சிகளும், 24 ஊராட்சிகளும் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில்  26வது மாநகராட்சியும் விரைவில் உதயமாகவுள்ளது. அதன்படி, மலை மாநகரமான ஊட்டி புதிய மாநகராட்சியாகிறது. ஊட்டி மாநகராட்சி அல்லது நீலகிரி மாநகராட்சி என்று இதற்கு பெயர் சூட்டடப்படும். இதில் 1 நகராட்சி, 1 பேரூராட்சி மற்றும் 4 ஊராட்சிகள் இணைக்கப்படவுள்ளன.


ஊராட்சி அமைப்புகள் மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட்ட பிறகு 19 மாநகராட்சிகளின் மக்கள் தொகை மற்றும் பரப்பளவு விவரம்:


கோயம்பத்தூர் - 18,07,605 - 438.54 சதுர கிலோமீட்டர்

மதுரை - 16,86,293 - 214.39

திருச்சிராப்பள்ளி - 11,62,270 - 410.29

தாம்பரம் - 10,08,473 - 172.34 

திருப்பூர் - 10,02,042 - 302.87

சேலம் - 9,13,120 - 211.35

ஆவடி - 6,95,212 - 188.51

திருநெல்வேலி - 5,66,539 -  204.08

ஈரோடு - 5,60,422 - 165.61

தூத்துக்குடி - 4,29,455 - 180.83

திண்டுக்கல் - 3,31,548 - 127.66

நாகர்கோவில் - 3,25,950 - 96.45

தஞ்சாவூர் - 3,13,345 - 121.97

ஓசூர் - 2,98,164 - 173.78

காஞ்சிபுரம் =- 2,84,561 - 112.40

சிவகாசி - 2,70,006 - 121.80

கரூர் - 2,63,795 - 125.56

கும்பகோணம் - 2,31,340 - 43.16

கடலூர் - 2,09,662 - 82.82



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்