"சில இரவுகளில் என் விரல்கள்".. மிரள வைக்கும் நிமிஷா சஜயனின் ஜிலீர் கவிதை!

Apr 01, 2023,04:45 PM IST
திருவனந்தபுரம்: நிமிஷா சஜயன்.. மலையாளத் திரையுலகின் சூப்பர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்.. வித்தியாசமான கேரக்டர்களில் அனாசயமாக நடித்துக் கலக்கிக் கொண்டிருக்கும் நிமிஷா.. சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் எழுதும் வரிகள், வரையும் ஓவியங்கள்  பரபரப்பையும், சலசலப்பையும் கிளப்பிக் கொண்டஉள்ளன.

தொண்டிமுதலும் திரிக்ஷக்சியும் என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் நிமிஷா. சோழா மற்றும் ஒரு குப்ரசித பய்யன் ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருதைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.  2 முறை பிலிம்பேர் விருதுகளும், 3 முறை சைமா விருதும் பெற்றவர்.



தி கிரேட் இந்தியன் கிச்சன், மாலிக், ஈடா  ஆகிய படங்கள் இவரது நடிப்புத் திறமைக்கும் மேலும் சில உதாரணங்கள். நயட்டு படத்தில் அட்டகாசமான கேரக்டரில் கலக்கியிருப்பார். அதேபோல ஒரு தெக்கன்தள்ளு கேஸ் படத்திலும் இவரது நடிப்பு பிரமாதமாக இருக்கும். 

நிமிஷா சஜயன் சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராமில் பரபரப்பைக் கிளப்பி வருகிறார்.  நிர்வாண ஓவியங்களை வரைந்து தள்ளிக் கொண்டிருக்கிறார். கூடவே அதில் கவிதை வரிகளையும் இணைத்து விடுகிறார். கவிதை வரிகள் என்றால் சாதாரணமானவை அல்ல.. .ஹாட்டான அனல் பறக்கும் காதல் + காமக் கவிதைகளாக அவை உள்ளன. 

அவர் எழுதிய கவிதைகளில் உதாரணத்திற்கு ஒன்று...

சில இரவுகளில்
எனது விரல்கள்
உரோமங்களுக்கும், தொடைகளுக்கும் இடையே ஊர்ந்து செல்கின்றன.
கண்கள் மூடிக் கிடக்கிறேன்
தலை முழுவதும்
உன் நினைவுகளால் நிரம்பிக் கிடக்கிறது!

இந்தக் கவிதை பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் கிளப்பியுள்ளது. நிமிஷாவுக்கு என்னாச்சு என்று பலரும் கேட்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் பலர் இவரது போல்டான கவிதைகளுக்கும், ஓவியங்களுக்கும் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

அதிகம் பார்க்கும் செய்திகள்