சென்னை: சினிமாவைப் பாருங்கள்.. வில்லன்கள் எல்லோருமே பெரும்பாலும் உயர் ஜாதி இந்துக்களாக இருப்பார்கள். ஹீரோக்கள் இந்துக்கள் அல்லாதவர்களாக இருப்பார்கள். இது இந்து துவேஷ போக்கு என்று சர்ச்சை சாமியார் நித்திாயனந்தா கூறியுள்ளார்.
சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வசித்து வருவதாக அவரது சமூக ஊடக பதிவுகள் கூறுகின்றன. இந்த கைலாசா தீவு எங்கிருக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை. ஆனால் நித்தியானந்தா பெயரில் உள்ள டிவிட்டர் பக்கத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.
எனவே அமெரிக்கா பக்கம் ஏதாவது ஒரு தீவுப் பகுதியில் நித்தியானந்தா தனது டீமோடு ஸ்டே பண்ணியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில் நித்தியானந்தா டீம் அவ்வப்போது போட்டு வரும் டிவீட்டுகள் அதிர வைக்கின்றன. ஐ.நா. சபையில் பேசுகிறார்கள். அமெரிக்க நகரத்துடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் போடுகிறார்கள்.
இந்த நிலையில் நித்தியானந்தா ஒரு டிவீட் போட்டுள்ளார். இது சினிமாக்காரர்களை குறி வைத்துப் போடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆங்கில கேப்பிடல் லெட்டரில் எழுதப்பட்டுள்ள இந்த டிவீட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்துப் படங்களையம் பார்த்தால் நமக்கு ஒன்று தெளிவாகப் புரியவரும். 90 சதவீத படங்களில் வரும் வில்லன்கள் எல்லோருமே இந்து அடையாளங்களுடன்தான் இருப்பார்கள். அதாவது விபூதி, குங்குமம், காவி உடை அணிந்து இருப்பார்கள். பெரும்பாலும் பிராணப் பெயர்கள்தான் அவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கும். அதாவது சர்மா, அய்யர், திரிவேதி போன்ற பெயர்கள், இவை எல்லாம் மேல்ஜாதிப் பெயர்கள். அதேசமயம் ஹீரோக்களைப் பார்த்தால் அவர்கள் இந்து அல்லாதவர்களாக இருப்பார்கள். இந்து அலலாதோர் எல்லோம் ரொம்ப எளிமையானவர்கள் போல சித்தரித்திருப்பார்கள். அதேசமயம், இந்துக்களை சாத்தான்கள் போல சித்தரித்திருப்பார்கள் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.
இந்த டிவீட் புது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், இதை வைத்து டிவிட்டராட்டிகள் பலர் கலாய்த்து கலகலப்பைக் கூட்டி வருகின்றனர். சிங்கம் களம் இறங்கிருச்சு என்று ஒருவர் கிளப்பி விட, தலைவா என்று ஒருவர் புளகாங்கிதம் அடைந்துள்ளார். நீங்கதான் சார் ரியல் ஹீரோ என்று ஒருவர் சல்யூட் வைத்து விட்டுப் போயுள்ளார்.
மொத்தத்துல (சினிமாக்காரர்களுக்கு) "வச்சாம் பாரு ஆப்பு"... அப்படின்னுதான் சொல்லத் தோணுது!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
{{comments.comment}}