பாட்னா: பீகார் மாநில ஆளுநரை இன்று முற்பகல் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்த நிதீஷ் குமார் இன்று மாலை மீண்டும் அதே ஆளுநரால் முதல்வராகப் பதவிப் பிரமானம் செய்து வைக்கப்பட்டார்.
இன்று முற்பகல் வரை ராஷ்டிரிய ஜனதாதளத்தின் ஆதரவுடன் முதல்வராக இருந்து வந்த நிதீஷ் குமார், மாலையிலிருந்து பாஜக ஆதரவு முதல்வராக புது அவதாரம் பூண்டுள்ளார். மாலையில் ஆளுநர் மாளிகையில் நடந்த பதவிப்பிரமான விழாவில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப்பிரமானம் செய்து வைத்தார். அவருடன் 8 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவும் கலந்து கொண்டார்.

கடந்த 23 ஆண்டு கால முதல்வர் வரலாற்றில் 4 முறை கூட்டணி மாறியுள்ளார் நிதீஷ் குமார். இப்போது 9வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் நிதீஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதாதளம் - ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றம் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. இந்தநிலையில் இந்தக் கூட்டணியை முறிக்க நிதீஷ்குமார் முடிவெடுத்தார். இந்தக் கூட்டணியை கைகழுவி விட்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அவர் தீர்மானித்தார்.
நிதீஷ் குமாருக்கு ஒரு காலத்தில் மிக மிக நல்ல பெயர் இருந்தது. நேர்மையாளர், தெளிவானவர், ஊழலுக்கு எதிரானவர் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் அவரது அடுத்தடுத்து அரசியல் பல்டிகள் அவரது பெயரை இப்போது வெகுவாக கெடுத்து விட்டதாக கருதப்படுகிறது.

ஆளுநரை சந்தித்து ராஜினாமா
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பல்டி அடித்தார் நிதீஷ் குமார். ராஷ்டிரிய ஜனதாதளத்துடனான கூட்டணியை கைவிட்டு பாஜகவுடன் கை கோர்த்துள்ளார். கட்சி எம்எல்ஏக்களுடன் இன்று காலை இறுதியாக ஆலோசனை நடத்திய பின்னர் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை நிதீஷ் குமார் சந்தித்தார். அப்போது தனது ராஜினாமா கடிதத்தை நிதீஷ் குமார் ஒப்படைத்தார்.
இதைத் தொடர்ந்து இன்று மாலையே மீண்டும் நிதீஷ் குமார் பாஜக ஆதரவுடன் மறுபடியும் ஆட்சியமைத்துள்ளார். மீண்டும் மீண்டும் அணி மாறி வரும் நிதீஷ் குமாருக்கு கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன. பச்சோந்திக்கே டப் கொடுக்கிறார் நிதீஷ்குமார் என்று காங்கிரஸ் கடுமையாக வசை பாடியுள்ளது. ராஷ்டிரிய ஜனதாதளம், நிதீஷ் குமாரை, குப்பை மீண்டும் குப்பைத் தொட்டிக்கே போய் விட்டது என்று ஆவேசமாக வர்ணித்துள்ளது.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பீகாரில் போட்டியிடுவது தொடர்பான தொகுதிப் பங்கீட்டையும் கூட பாஜகவுடன், நிதீஷ் குமார் பேசி முடித்து விட்டதாகவும் சொல்கிறார்கள். நிதீஷ் குமார் நேரடியாக உள்துறை அமைச்சர் அமீத் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் மட்டுமே பேசி அனைத்தையும் முடிவு செய்ததாக சொல்கிறார்கள்.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}