சென்னை: ஹேமா கமிட்டி அறிக்கையில் வெளியான தகவல்கள் வருத்தம் அளிக்கிறது. மலையாள சினிமாவின் பெண்கள் அமைப்பால் தான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெண்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டியது அவசியம் என ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகை நிவேதா தாமஸ் பேசியுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நிவேதா தாமஸ். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள தொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனுடன் பாபநாசம் மற்றும் ரஜினியுடன் தர்பார் படங்களிலும் நடித்திருக்கிறார். அதேபோல விஜய்யுடன் ஜில்லா படத்தில் அவரது தங்கச்சியாக நடித்திருப்பார்.

இவர் நடித்த '35 சின்ன கதை காடு' என்ற திரைப்படம் வருகிற 6ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டு இருந்தது. இது பல பேர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்த அறிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்களை கூறி வருகின்றனர்.அந்த வகையில் தற்போது நிவேதா தாமஸ் ஹேமா கமிட்டி அறிக்கைக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ஹேமா கமிட்டி அறிக்கை மிகவும் கவலையை அளிக்கிறது. பெண்கள் அமைப்பால் தான் இந்த விஷயம் வெளியே வந்துள்ளது. எந்ந துறையில் பெண்கள் வேலை பார்த்தாலும் அவர்களின் பாதுகாப்புக்கு அவசியம் முக்கியத்துவம் தர வேண்டும். வீட்டில் இருப்பதை விட பெண்கள் அதிக நேரம் பணியிடங்களில் தான் செலவழிக்கிறோம். ஹேமா கமிட்டி போல் மற்ற சினிமா துறையிலும் வந்தால் நல்லது என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}