சண்டிகர்: பள்ளிகளில் Good Morning, Good Afternoon-க்கு பதிலாக ஜெய்ஹிந்த் என்று சொல்ல வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் ஹரியானா பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பள்ளி மாணவர்களின் மனதில் தேசப்பற்றை வளர்க்கும் விதமாக ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அனைத்து பள்ளி மாணவர்களும் Good Morning, Good Afternoonக்கு பதிலாக ஜெய்ஹிந்த் என்று கூற வேண்டும் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் அனுப்பிய சுற்றறிக்கையில், தேசப்பற்று நாட்டின் மீதான பெருமையை உணர்த்தும் வகையில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இனி பள்ளிகளில் காலை குட் மார்னிங்க்கு பதிலாக ஜெய்ஹிந்த் என சொல்ல மாணவர்களுக்கு வலியுறுத்த வேண்டும். ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தும் போது மாணவர்களிடையே ஒரு ஒற்றுமை உணர்வை ஏற்படும் தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடியவர்களின் தியாகங்கள் பற்றி அறிந்து கொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்ட ஜெய் ஹிந்த் முழக்கம் பிராந்திய மற்றும் கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையைக் குறிக்கிறது.இந்த புதிய வாழ்த்து மாணவர்களிடையே தேசிய ஒருமைப்பாடு இந்திய வரலாற்றின் மீதான மரியாதை, அவர்களின் அடையாளம் மற்றும் தேசத்திற்கு சாத்தியமான பங்களிப்பையும் தினசரி நினைவூட்டல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது.
தேசத்தை கட்டி எழுப்புவதில் மாணவர்களின் எதிர்கால பங்கை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சக ஊழியர்களுக்கு வணக்கம் என்று கூறுவதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் என்று சொல்ல துவங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}