ஸ்டாக்ஹோம்: 2023ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2 ஆய்வாளர்களுக்குக் கிடைத்துள்ளது.
ஸ்வீடன் நாட்டில் உள்ள நோபல் பரிசுக் குழு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் நோபல் பரிசை அறிவித்து வருகிறது. உலக அளவில் உயரிய விருதாக இது கருதப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளை அறிவிக்க ஆரம்பித்துள்ளனர். முதல் விருதாக மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசை, கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வுக்காக விஞ்ஞானிகள் காத்தலின் கரிகோ மற்றும் டிரூ வெய்ஸ்மேன் ஆகியோர் பெறவுள்ளனர்.
கொரோனா வைரஸுக்கு எதிரான எம்ஆர்என்ஏ தடுப்பூசி மருந்துக்கான முக்கிய கண்டுபிடிப்புக்காக இந்த பரிசை இருவரும் பெறவுள்ளனர். இந்த விருதை நோபல் பரிசுக் கமிட்டிக் குழு செயலாளர் தாமஸ் பியர்ல்மன் அறிவித்தார்.
நமது உடலின் நோய் எதிர்ப்பு கட்டமைப்பில் எம்ஆர்என்ஏ எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பது குறித்த கூடுதல் தெளிவை வெய்ஸ்மேனின் கண்டுபிடிப்புகள் ஏற்படுத்தின என்று நோபல் பரிசுக் கமிட்டி தெரிவித்துள்ளது.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவரும் டைனமைட்டைக் கண்டுபிடித்த விஞ்ஞானியுமான ஆல்பிரட் நோபல்தான் இந்த பரிசை நிறுவினார். அறிவியல் துறையில் சிறந்த கண்டுபிடிப்புகளை வழங்குவோரைக் கெளரவிக்கும் வகையில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது என்று தெரியவில்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
தந்தையை உளவு பார்த்த மகன்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு வைத்த டாக்டர் ராமதாஸ்!
விஜய்யின் காஸ்ட்லி மிஸ்.. ஓபிஎஸ்ஸை தவற விட்டது எப்படி?.. திமுகவின் மின்னல் வேக ஸ்கெட்ச்!
நலம் காக்கும் ஸ்டாலின்... சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தங்கம் விலையில் அதிரடி... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!
தேசிய விருது பெற்ற.. பார்க்கிங் குழு.. தோழி ஊர்வசி.. தம்பி ஜி.வி.பிரகாஷுக்கு ..கமல்ஹாசன் வாழ்த்து!
ஆடிப்பெருக்கு.. நீரின்றி அமையாது உலகு.. தண்ணீர்த் தாயை போற்றி வணங்கி வழிபடுவோம்!
மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம்.. மாரடைப்பு.. சோட்டானிக்கரை ஹோட்டலில் பரபரப்பு!
{{comments.comment}}