ஸ்டாக்ஹோம்: 2023ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2 ஆய்வாளர்களுக்குக் கிடைத்துள்ளது.
ஸ்வீடன் நாட்டில் உள்ள நோபல் பரிசுக் குழு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் நோபல் பரிசை அறிவித்து வருகிறது. உலக அளவில் உயரிய விருதாக இது கருதப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளை அறிவிக்க ஆரம்பித்துள்ளனர். முதல் விருதாக மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசை, கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வுக்காக விஞ்ஞானிகள் காத்தலின் கரிகோ மற்றும் டிரூ வெய்ஸ்மேன் ஆகியோர் பெறவுள்ளனர்.
கொரோனா வைரஸுக்கு எதிரான எம்ஆர்என்ஏ தடுப்பூசி மருந்துக்கான முக்கிய கண்டுபிடிப்புக்காக இந்த பரிசை இருவரும் பெறவுள்ளனர். இந்த விருதை நோபல் பரிசுக் கமிட்டிக் குழு செயலாளர் தாமஸ் பியர்ல்மன் அறிவித்தார்.
நமது உடலின் நோய் எதிர்ப்பு கட்டமைப்பில் எம்ஆர்என்ஏ எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பது குறித்த கூடுதல் தெளிவை வெய்ஸ்மேனின் கண்டுபிடிப்புகள் ஏற்படுத்தின என்று நோபல் பரிசுக் கமிட்டி தெரிவித்துள்ளது.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவரும் டைனமைட்டைக் கண்டுபிடித்த விஞ்ஞானியுமான ஆல்பிரட் நோபல்தான் இந்த பரிசை நிறுவினார். அறிவியல் துறையில் சிறந்த கண்டுபிடிப்புகளை வழங்குவோரைக் கெளரவிக்கும் வகையில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
Diwali Special trains: பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல்!
தமிழகத்தில் இன்று 10 மற்றும் நாளை 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை
வக்ஃபு திருத்தச் சட்டம்:உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம்:திருமாவளவன்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து
நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்
துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்
வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்
பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்
Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!
{{comments.comment}}