90ஸ் கிட்ஸின் மனதை கொள்ளை கொண்ட.. நோக்கியா 3210.. புதுப்பொலிவுடன் மீண்டும் வருகிறது!

Apr 30, 2024,08:42 AM IST

சென்னை:  கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் பிரபலமாக இருந்த நோக்கியா 3210 மாடல் மொபைல் போன் மீண்டும் விற்பனைக்கு வர உள்ளதாக எச்எம்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.


கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் போன் என்று சொன்னால் பெரும்பாலானவர்கள் சொல்வது நோக்கியா போன் தான். மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் மிகவும் பிரபலமாக இருந்த போன் தான் நோக்கியா 3210. இந்த போனுக்கு என்றே நிறைய வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். எதற்காக இந்த மாடல் போன் மக்கள் மத்தியில் விருப்பப்பட்டது என்று தெரியுமா?


இந்த போனில் நீண்ட நேரம் பேட்டரி சார்ஜ் நிற்கும். 22 மணி நேரம் பேசும் அளவிற்கு சார்ஜ் இருக்கும். அதுமட்டுமின்றி 20 ஆண்டுகளுக்கு முன்னால் பிரபலமான சினேக் என்ற கேம்ஸ் இதில் உண்டு. மேலும், இந்த போன் கைக்கு அடக்கமாகவும், கீழே விழுந்தாலும் உடையாமலும் இருக்கும் என்ற பல காரணங்களால் இந்த போனை பெரும்பலானவர்கள் விரும்பி வாங்கி வந்தனர். 




இந்த நோக்கியா 3210 மீண்டும் புதுப்பொலிவுடன் விற்பனைக்கு வர உள்ளது. புது வரவில் 4ஜி, புளூடூத், புதுப்பிக்கப்பட்ட ஸ்னேக் கேம்ஸ் ஆகியவை இருக்குமாம். இந்த போன் ரூ. 3210க்கு விற்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கூடுதல் வசதிகளுடன் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளதாம். இந்த போன் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.


நோக்கியா 3210 போன் முதன் முதலில் அறிமுகமானது 1999ம் ஆண்டு. செல்போன்கள் மீது மக்களுக்கு விழிப்புணர்வு வந்து கொண்டிருந்த காலம். இப்போது போன்ற வசதிகள் இல்லாத காலம். அப்போது வந்த இந்த 3210 போன் அத்தனை பேரையும் கட்டிப் போட்டது. இந்த போன் வைத்திருந்தால் தனி மதிப்பு கிடைத்தது. அந்த அளவுக்கு பலரையும் ஈர்த்த சூப்பர் போன் இது. இந்த போன் இப்போது கூடுதல் சிறப்புகளுடன் மீண்டும் வருவது செல்போன் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

WTC 2025 Finals: உலக டெஸ்ட் சாம்பியன் தென் ஆப்பிரிக்கா.. ஆஸ்திரேலியாவை வச்சு செய்து அபாரம்!

news

Dubai fire: துபாய் .. 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. உயிர் அபாயம் ஏதுமில்லை

news

இஸ்ரேல் தாக்குதல் : ஈரானில் இருந்து வெளியே முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்

news

சரமாரியான தாக்குதலால்.. தீவிரமடையும் இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் .. இந்தியா யார் பக்கம்?

news

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்.. பயணங்கள் தாமதமாகலாம் or ரத்தாகலாம்.. இண்டிகோ தகவல்

news

ஏர்இந்தியா விமான விபத்து பற்றி 3 மாதங்களுக்குள் விசாரிக்கப்படும் - அமைச்சர் ராம் மோகன் நாயுடு

news

ஏர் இந்தியா விமான விபத்து ஒரு சைபர் தாக்குதலா?... சந்தேகம் கிளப்பும் சிவசேனா !

news

இஸ்ரேல் தாக்குதலில் பலியான முப்படைத் தளபதி.. புதிய ராணுவ தளபதியை அறிவித்த ஈரான்

news

பற்றி எரியும் மத்திய கிழக்கு.. அனல் பறக்கும் சண்டையில் இஸ்ரேல் - ஈரான்.. மக்கள் பரிதவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்