டில்லி : இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இன்னும் ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் ஏற்கனவே கனமழை பெய்து வருகிறது. இதில் மும்பை, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. கேரளாவின் வயநாட்டில் பெய்த கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு மீட்டுப் பணிகள் ஒரு வாரமாக நடந்து வருகிறது. அங்கும் இன்னும் மழை, வெள்ளம் ஓய்ந்த பாடில்லை. இந்நிலையில் இன்னும் மழை தொடரும் என வானிலை மழை எச்சரித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புதிய தகவலின் படி, வடகிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக மேற்கு மத்திய பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய இந்தியா பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வடமேற்கு மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்திரகாண்ட், ராஜஸ்தான், உத்தகர பிரதேசம், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டில்லி ஆகிய மாநிலங்களில் இடி, மின்னலுடன் இந்த வாரம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 6 ம் தேதி வரை மேற்கு ராஜஸ்தானில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் உத்திரகாண்டில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஆகஸ்டெ 04ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 10ம் தேதி வரத அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 05ம் தேதி கொங்கன், கோவா ஆகிய பகுதிகளிலும் மிக அதிக கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}