பூசாரிகள்தான் ஜாதியை உருவாக்கினார்கள்.. கடவுள் அல்ல.. சொல்கிறார் மோகன் பகவத்

Feb 06, 2023,10:46 AM IST
மும்பை: நாட்டு மக்கள் அனைவரின் மனசாட்சியும், விழிப்புணர்வும் ஒரே மாதிரிதான் உள்ளது. அதில் எந்த வேறுபடும். கருத்துக்கள் மட்டுமே மாறுபடுகின்றன. ஜாதியை உருவாக்கியது கடவுள் அல்ல..  பூசாரிகள்தான் என்று கூறியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.



மும்பையில் துறவி சிரோமணி ரோஹிதாஸின் 647வது பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோகன்  பகவத் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நமது வாழ்க்கைக்காக இந்த சமூகத்திடமிருந்து சம்பாதிக்கிறோம். அதேபோல இந்த சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது. நாம் செய்யும் ஒவ்வொரு வேலையும் இந்த சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாக உள்ளபோது, அதில்  பெரிது என்றும் சிறிது  என்றும் எப்படி வேறுபடுத்திப் பார்க்க முடியும்.?

நம்மைப் படைத்தவனுக்கு நாம் ஒன்றுதான். சமமானவர்கள்தான். இங்கு ஜாதியும் கிடையாது, பிற பிரிவினைகளும் கிடையாது. இந்தப் பிரிவினையெல்லாம் பூசாரிகள் செய்தது. அது தவறானது. கடவுள் இதைச் செய்யவில்லை. நாட்டின் மனசாட்சியும், விழிப்புணர்வும் ஒன்றாகவே உள்ளது. அதில் எந்த வித்தியாசமும் இல்லை. கருத்துக்கள் மட்டுமே வேறுபடுகின்றன என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்