பூசாரிகள்தான் ஜாதியை உருவாக்கினார்கள்.. கடவுள் அல்ல.. சொல்கிறார் மோகன் பகவத்

Feb 06, 2023,10:46 AM IST
மும்பை: நாட்டு மக்கள் அனைவரின் மனசாட்சியும், விழிப்புணர்வும் ஒரே மாதிரிதான் உள்ளது. அதில் எந்த வேறுபடும். கருத்துக்கள் மட்டுமே மாறுபடுகின்றன. ஜாதியை உருவாக்கியது கடவுள் அல்ல..  பூசாரிகள்தான் என்று கூறியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.



மும்பையில் துறவி சிரோமணி ரோஹிதாஸின் 647வது பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோகன்  பகவத் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நமது வாழ்க்கைக்காக இந்த சமூகத்திடமிருந்து சம்பாதிக்கிறோம். அதேபோல இந்த சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது. நாம் செய்யும் ஒவ்வொரு வேலையும் இந்த சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாக உள்ளபோது, அதில்  பெரிது என்றும் சிறிது  என்றும் எப்படி வேறுபடுத்திப் பார்க்க முடியும்.?

நம்மைப் படைத்தவனுக்கு நாம் ஒன்றுதான். சமமானவர்கள்தான். இங்கு ஜாதியும் கிடையாது, பிற பிரிவினைகளும் கிடையாது. இந்தப் பிரிவினையெல்லாம் பூசாரிகள் செய்தது. அது தவறானது. கடவுள் இதைச் செய்யவில்லை. நாட்டின் மனசாட்சியும், விழிப்புணர்வும் ஒன்றாகவே உள்ளது. அதில் எந்த வித்தியாசமும் இல்லை. கருத்துக்கள் மட்டுமே வேறுபடுகின்றன என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!

news

"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

news

ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு

news

எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்

news

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

news

ஏ டி எம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? நேரில் செயல் விளக்கம் பெற்ற மாணவர்கள்!

news

டெல்லியில் டிஜிபி அலுவலகம் முன்பு ராகுல் காந்தி திடீர் தர்ணா போராட்டம்

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி பூஜை ஏன் செய்யப்படுகிறது?

news

சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்