வேலூர்: இனி வேலூரில் இருந்து மைசூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள், விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அவ்வப்போது பல்வேறு வசதிகள், புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகளையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய வசதியை பயணிகள் நலனுக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது. அது என்னவென்றால், தற்போது வேலூரில் இருந்து மைசூருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்ந்தவர்கள் இனி மைசூருக்கு செல்வது எளிமையாகியுள்ளது.
அதாவது, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் வேலூரில் இருந்து மைசூருக்கு குளிரூட்டப்பட்ட படுக்கை மற்றும் இருக்கை வசதி உள்ள பேருந்து ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்தி பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான டிக்கெட் முன்பதிவுக்கு www.tnstc.in என்ற இணையதளத்திலோ அல்லது TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலியிலோ அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}