வேலூர்: இனி வேலூரில் இருந்து மைசூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள், விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அவ்வப்போது பல்வேறு வசதிகள், புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகளையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய வசதியை பயணிகள் நலனுக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது. அது என்னவென்றால், தற்போது வேலூரில் இருந்து மைசூருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்ந்தவர்கள் இனி மைசூருக்கு செல்வது எளிமையாகியுள்ளது.
அதாவது, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் வேலூரில் இருந்து மைசூருக்கு குளிரூட்டப்பட்ட படுக்கை மற்றும் இருக்கை வசதி உள்ள பேருந்து ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்தி பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான டிக்கெட் முன்பதிவுக்கு www.tnstc.in என்ற இணையதளத்திலோ அல்லது TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலியிலோ அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்டு.. தரையில் கிடத்தி.. அமெரிக்க விமான நிலையத்தில் அராஜகம்
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}