வேலூர்: இனி வேலூரில் இருந்து மைசூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள், விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அவ்வப்போது பல்வேறு வசதிகள், புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகளையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய வசதியை பயணிகள் நலனுக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது. அது என்னவென்றால், தற்போது வேலூரில் இருந்து மைசூருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்ந்தவர்கள் இனி மைசூருக்கு செல்வது எளிமையாகியுள்ளது.
அதாவது, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் வேலூரில் இருந்து மைசூருக்கு குளிரூட்டப்பட்ட படுக்கை மற்றும் இருக்கை வசதி உள்ள பேருந்து ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்தி பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான டிக்கெட் முன்பதிவுக்கு www.tnstc.in என்ற இணையதளத்திலோ அல்லது TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலியிலோ அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
மனசைத் தொட்ட அந்த 5 ரூபாய் பரிசு!
ஆசிரியர்!
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
{{comments.comment}}