சென்னை: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாய் கடித்து சிறுமி காயமடைந்த நிலையில், தற்போது மீண்டும் அஸ்வந்த் என்ற 11 வயது சிறுவனை நாய் கடித்து காயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வருபவர் அஸ்வந்த் என்ற 11 வயது சிறுவன். தற்போது பள்ளிக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோடை விடுமுறையைக் களிப்பதற்காக சிறுவன் அஸ்வந்த் ஆலத்தூர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் தனது அத்தை வீட்டிற்கு வந்துள்ளார்.
நேற்று மாலை அஸ்வந்த் விளையாடிக் கொண்டிருக்கும்போது அதே பகுதியில் ஒரு வீட்டில் சைப்ரீயன் ஹஸ்கி வகை நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். திடீரென அந்த நாய் சிறுவனை கடித்தது. இதில் சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறினான். இதனை அறிந்து உடனே சிறுவனை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து சிறுவன் அஸ்வந்த் பெற்றோர் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை ராட்வெய்லர் வகை நாய் ஒன்று கடித்து குதறியது. அதேபோல் மீண்டும் சிறுவனை நாய் கடித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
திமுக-விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி வலுவாக உள்ளது.. திருமாவளவன் திட்டவட்டம்
திருச்சி அருகே நடந்த கோர விபத்தில் உயிரிழந்த ஆர்டிஓ தேவசேனா.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
திமுகவின் கண்ணுக்குட்டி மட்டுமல்ல.. கண்ணுக்குட்டியின் எஜமானர்களும் சிக்குவர்: எடப்பாடி பழனிச்சாமி
அகமதாபாத் விமான விபத்து... ஏர் இந்தியா கருப்புப் பெட்டி கடும் சேதம்!
கமல் படத்தைத் தடுக்க உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?.. கன்னட அமைப்புகளுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!
கொமேனியைத் தெரியுமா.. ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள நெருக்கமான லிங்க்!
குடமுழுக்கு முழுமையாக தமிழில் நடத்தப்பட வேண்டும்... தமிழிலும் குடமுழுக்கு என்பது அவமானம்: சீமான்!
நம் சமையலறையில்.. ஏலக்காய்க்கு முக்கியத்துவம் ஏன் தெரியுமா.. இதாங்க காரணம்!
மீண்டும் தொடர் உயர்வில் தங்கம்... இன்றைக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
{{comments.comment}}