டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட கமிட்டியின் முதல் கூட்டம், அக்கமிட்டியின் தலைவரான முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்தத் திட்டம் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் கமிட்டி பரிந்துரைக்கும் யோசனைகளை அமபல்படுத்தவும் அது திட்டமிட்டுள்ளது.
இந்தக் கமிட்டியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட எட்டு பேர் அறிவிக்கப்பட்டனர். இக்கமிட்டியின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
இன்றைய கூட்டத்தில் ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்குத் தேர்தல் நடத்துவது குறித்த சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயப்படும். இந்திய அரசியலமைப்பு சாசனச் சட்டத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் தேவை என்பது குறித்தும் ஆராயப்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக தீவிரமாக ஆதரித்து வரும் நிலையில், அதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றன. இந்த நிலையில்தான் இந்த திட்டம்தொடர்பாக ராம்நாத் கோவிந்த் கமிட்டி என்ன பரிந்துரையை அளிக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவராக இருந்தபோது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வலுவாக ஆதரித்து நாடாளுமன்றத்திலேயே பேசியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
மனசைத் தொட்ட அந்த 5 ரூபாய் பரிசு!
ஆசிரியர்!
{{comments.comment}}