டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட கமிட்டியின் முதல் கூட்டம், அக்கமிட்டியின் தலைவரான முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்தத் திட்டம் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் கமிட்டி பரிந்துரைக்கும் யோசனைகளை அமபல்படுத்தவும் அது திட்டமிட்டுள்ளது.
இந்தக் கமிட்டியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட எட்டு பேர் அறிவிக்கப்பட்டனர். இக்கமிட்டியின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
இன்றைய கூட்டத்தில் ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்குத் தேர்தல் நடத்துவது குறித்த சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயப்படும். இந்திய அரசியலமைப்பு சாசனச் சட்டத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் தேவை என்பது குறித்தும் ஆராயப்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக தீவிரமாக ஆதரித்து வரும் நிலையில், அதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றன. இந்த நிலையில்தான் இந்த திட்டம்தொடர்பாக ராம்நாத் கோவிந்த் கமிட்டி என்ன பரிந்துரையை அளிக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவராக இருந்தபோது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வலுவாக ஆதரித்து நாடாளுமன்றத்திலேயே பேசியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}