"இங்க அடிச்சா அங்க கேட்கும்".. வந்து விட்டது ஊராட்சி மணி.. குறைகளைத் தீர்க்க!

Sep 29, 2023,12:25 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் கிராமப் புறப் பகுதிகளில் உள்ள குறைகளை  போக்கும்  விதமாக ஊராட்சி மணி என்ற சேவை தொடங்கப்பட்டுள்ளது. 


இதன்படி இலவச தொலைபேசி எண் ஒன்றை அரசு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு போன் செய்து நமது ஊர்ப் பிரச்சினைகளைச் சொன்னால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அதை சரி செய்ய முயற்சிப்பார்கள். தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறையால் இது செயல்படுத்தப்பட்டவுள்ளது.


இச்சேவையை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செப்டம்பர் 27ம் தேதி இணைய வழியாக தொடங்கி வைத்துள்ளார். பொது மக்கள் 155340 என்ற எண்ணை அழைத்து  தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். 


இந்த மையம் அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். தற்பொழுது 10 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கிராமத்தினை சேர்ந்தவர்களும் மிக எளிமையான முறையில் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணும் பொருட்டு ஏற்பாடுகளை  செய்துள்ளது தமிழக அரசு.


155340 என்ற தொலைப்பேசி வாயிலாகவும்,  Ooratchimani.in என்ற வலைத்தளம் மூலமும் எளிதாக அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி, இணைய வயிலாக பெறப்படும் புகார்களின் தன்மையை பொருத்து விரைந்து தீர்வு காணப்படும். ஓவ்வொரு புகார்களும் குறிப்பிட்ட காலவரையரைக்குள் தீர்வு வழங்கப்படும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் போன்றவர்களுக்கு ஏற்படும் குறைகளையும், சந்தேகங்களையும் இந்த ஊராட்சி மணி மூலம் அணுகலாம். இவர்களுக்கும் விரைந்து பதில் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


"இங்க அடிச்சா அங்க கேட்கும்".. என்ற கேப்ஷனுடன் இதுகுறித்த விளம்பரத்தை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. அடிப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் இதை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்