ஊட்டி: ஊட்டியில் மலர்களால் செய்யப்பட்ட யானை, சிங்கம், முயல் உள்ளிட்ட டிசைன்களுடன் கூடிய கண்கவர் மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த கண்காட்சி 11 நாட்கள் நடைபெறுகிறது. கண்காட்சியினை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்து வருகின்றனர்.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படுவது ஊட்டி. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் களைகட்டும். அப்படி தான் இந்த ஆண்டிற்கான சீசன் தற்போது களைகட்ட தொடங்கியுள்ளது. வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். அவர்களை கவரும் விதத்தில் ஊட்டியில் நகராட்சி சார்பில் பல ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வரிசையில், 126வது ஆண்டாக மலர்க் கண்காட்சி தொடங்கியுள்ளது. மே 20ம் தேதி வரை நடைபெற உள்ள மலர் கண்காட்சியை தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வேளாண் உற்பத்தி ஆணையர் அபூர்வா ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
மலர் கண்காட்சியை முன்னிட்டு, பிளாக்ஸ், பெட்டூனியா,பேன்சி, டயான்தஸ், பிகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ் வயோலா, அஜிரேட்டம், இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்ட என பல்வேறு வகையான செடிகள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வந்துள்ளன. அவைகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டள்ளன.
விழாவின் முக்கிய அம்சமாக பெங்களூரு மற்றும் ஓசூரில் இருந்து வரவழைக்கப்பட்ட, சுமார் ஒரு லட்சம் ரோஜா மலர்கள் மூலம் ஆக்டோபஸ், டிஸ்னி வோர்ல்டு, யானை, சிங்கம், புலி, வரையாடு, காட்டுஎருமை என பல்வேறு வடிவங்களில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர பல ஆயிரம் மலர்களைக் கொண்டு ஆங்காங்கே ஆலங்கார மலர் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்களால் ஆன அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இத்துடன் இந்த மலர்கண்காட்சியின் போது கலை நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம். ஆக மொத்தத்தில் இந்தாண்டு ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு மகிழ்விக்கும் விதத்தில் பல சிறப்புகள் இருப்பது உறுதி. மலர் காண்காட்சியை முன்னிட்டு ஊட்டியில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}