சென்னை: பெண் காவலர்கள் வசதிக்காக சென்னையில் 5 இடங்களில் பயோ டாய்லெட் திறந்து வைத்தார் மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.
பெண் காவலர்கள் வசதிக்காக சென்னையில் 5 இடங்களில் பயோ டாய்லெட் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. பல்லவன் இல்லம், நேப்பியர் பாலம், உழைப்பாளர் பாலம், உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, விவேகானந்தர் இல்லம் ஆகிய 5 இடங்களில் பெண் காவலர்கள் வசதிக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனை, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.

அவர் பேசுகையில், போக்குவரத்து மகளிர் காவல் நிலையத்தில் யார் யார் உள்ளனர்களோ அவர்கள் பயன்பெறும் வகையில் பயோ டாய்லெட் திறந்திருக்கிறோம். மகளிருக்காக சென்னையில் முக்கியமான 5 இடங்களில் இந்த பயோ டாய்லெட் வசதி செய்யப்பட்டிருக்கிறது. மகளிர் காவலர்களுக்கு இந்த மாதிரி பயோ டாய்லெட் வசதி இந்தியாவிலேயே முதன் முதலில் டிசைன் செய்யப்பட்டிருக்கு. ஒரு முறை தண்ணீர் நிறப்பினால் 10 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். தினமும் க்ளின் செய்ய தேவை இல்லை.

3 மாதங்களுக்கு ஒரு முறை க்ளீன் செய்தால் போதுமானது. மகளிர் போலீஸ் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் சக்சஸ் ஆகினால், இதனை விரிவு படுத்தலாம். எங்கெல்லாம் போலீஸ் பூத் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த வசதி கொண்டு வரப்படும். சுமார் 2 லட்சம் இதற்கு செலவாகியுள்ளது.இந்த மாதிரி கோடைக்காலத்தில் மகளிர் காவலர்களுக்கு சோலார் தொப்பி, மோர், இளநீர் போன்ற பல வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}