சென்னை.. பெண் காவலர் வசதிக்காக 5 இடங்களில் பயோ டாய்லெட் திறப்பு

Mar 02, 2024,03:51 PM IST

சென்னை: பெண் காவலர்கள் வசதிக்காக சென்னையில் 5 இடங்களில் பயோ டாய்லெட் திறந்து வைத்தார் மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.


பெண் காவலர்கள் வசதிக்காக சென்னையில் 5 இடங்களில் பயோ டாய்லெட் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. பல்லவன் இல்லம், நேப்பியர் பாலம், உழைப்பாளர் பாலம், உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, விவேகானந்தர் இல்லம் ஆகிய 5 இடங்களில் பெண் காவலர்கள் வசதிக்காக திறக்கப்பட்டுள்ளது.  இதனை, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர். 




அவர் பேசுகையில், போக்குவரத்து மகளிர் காவல் நிலையத்தில் யார் யார் உள்ளனர்களோ அவர்கள் பயன்பெறும் வகையில் பயோ டாய்லெட் திறந்திருக்கிறோம். மகளிருக்காக சென்னையில் முக்கியமான 5 இடங்களில் இந்த பயோ டாய்லெட் வசதி செய்யப்பட்டிருக்கிறது. மகளிர் காவலர்களுக்கு இந்த மாதிரி பயோ டாய்லெட் வசதி இந்தியாவிலேயே முதன் முதலில் டிசைன் செய்யப்பட்டிருக்கு. ஒரு முறை தண்ணீர் நிறப்பினால் 10 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். தினமும் க்ளின் செய்ய தேவை இல்லை.



 

3 மாதங்களுக்கு ஒரு முறை க்ளீன் செய்தால் போதுமானது. மகளிர் போலீஸ் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் சக்சஸ் ஆகினால், இதனை விரிவு படுத்தலாம். எங்கெல்லாம் போலீஸ் பூத் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த வசதி கொண்டு வரப்படும். சுமார் 2 லட்சம் இதற்கு செலவாகியுள்ளது.இந்த மாதிரி கோடைக்காலத்தில் மகளிர் காவலர்களுக்கு சோலார் தொப்பி, மோர், இளநீர் போன்ற பல வசதிகள்  செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

எத்தனை மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டப்போகுது தெரியுமா.... இதோ வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு

news

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி இழிவான செயல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பீகார் சட்டசபை தேர்தல் 2025.. 2 கட்டமாக நவம்பர் 6, 11 ல் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

news

கரூர் சம்பவத்தில் விஜய்யை குற்றவாளி ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது - அண்ணாமலை

news

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

news

டாக்டர் ராமதாஸ் ஐசியூவில் இருப்பதால் பார்க்கவில்லை - அன்புமணி: உடனிருந்து பார்க்கிறேன் - ஜிகே மணி

news

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஆளுநரின் பேச்சு.. விலாவரியாக விளாசித் தள்ளிய முதல்வர் ஸ்டாலின்.. பொசுக்கென்று பதிலடி தந்த தமிழிசை!

news

அதிரடி சரவெடி... புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... சவரன் 88,000த்தை கடந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்