பொங்கலுக்கு ஊருக்குப் போலாமா.. இன்று முதல் 13ம் தேதி வரை .. 21,904 சிறப்புப் பேருந்துகள்!

Jan 10, 2025,08:20 PM IST

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை, 4 நாட்களுக்கு மொத்தம் 21 ஆயிரத்து 904 சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக  சென்னை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும்  மூன்று நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை விடப்படும். ஆனால் இந்த வருடம் தொடர்ந்து ஆறு நாட்கள் பொதுவிடுமுறை விடப்படுகிறது. இந்தத் தொடர் விடுமுறை காரணத்தால் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட மக்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க துவங்கி விட்டனர். இதனால் பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிப்பதற்காக தினசரி இயக்கம் பேருந்துகளை விட கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.




அதன்படி தமிழக அரசு சார்பில் இன்று முதல் வரும் 13ம் தேதி வரை 4 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து மொத்தம் 21,904 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் பேருந்துகள் என 4 நாட்களுக்கு மொத்தம் 14,104 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல் திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. 


குறிப்பாக சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம், ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில்  இருந்து பிற ஊர்களுக்கு 3,537 பேருந்துகளும், பிற முக்கிய நகரகங்களில் இருந்து 1,560 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.  அதன்படி, மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா வழியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன . கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி வழியாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.


அதேபோல் வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை வழியாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் வழியாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் மப்சல் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படவுள்ளன. மேலும் பயணிகள் இப்பேருந்து நிலையங்களுக்குச் செல்ல மாநகர சிறப்பு இணைப்பு பேருந்துகளும் இயக்க  ஏற்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்த கழகம் தெரிவித்துள்ளது.


சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் குறித்த தகவலை அறியவும், பேருந்துகள் இயக்கம் குறித்து புகார் அளிக்க 94450-14436 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற இலவச எண்ணிலும்,  044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களிலும் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!

news

SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

news

அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக

news

SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்