மக்களே ரெடியாக இருந்துக்கோங்க... நாளை சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்... நாகைக்கு ரெட் அலர்ட்!

Oct 14, 2024,05:14 PM IST

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நாளை சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், நாகை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ரெட் அலர்ட்டும் விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் முன்னரே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், கனமழை குறித்து முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 



கடந்த ஆண்டு பருவமழை தீவிரம் அடைந்ததால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல இடங்கள் பாதிக்கப்பட்டது. இதனை தடுக்க  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. அதன்படி சென்னை,  செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மெட்ரோ ரயில் மற்றும் பறக்கும் ரயில் சேவை எண்ணிக்கைகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அக்டோபர் 15 முதல் 18ஆம் தேதி வரை ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்க கூடிய இடங்களில் இன்றே மீட்பு படகுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும்  தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை பல மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.

ரெட் அலர்ட்

திருவாரூர்
நாகை
மயிலாடுதுறை

ஆரஞ்ச் அலர்ட்

சென்னை
திருவள்ளூர்
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவண்ணாமலை
ராணிப்பேட்டை
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
கடலூர்
அரியலூர்
பெரம்பலூர்
தஞ்சாவூர்

மஞ்சள் அலர்ட் 

வேலூர்
திருப்பத்தூர்
கிருஷ்ணகிரி
தருமபுரி
சேலம்
திருச்சி
புதுக்கோட்டை



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்