தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்....6 நாட்களுக்கு மழை தொடரும்

Oct 05, 2024,03:52 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதால் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு  அலர்ட் விடுத்து எச்சரித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.


ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு  வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் தற்போது வெக்கை  தணிந்து சற்று குளுமையான சூழல் நிலவி வருகிறது. அதே வேளையில் வடகிழக்கு பருவமழையும் தொடங்க உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் கனமழையும், ஒரு சில பகுதிகளில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  இந்த மாவட்டங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அப்பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


அதேபோல் திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை,ஆகிய 11 மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழக கடலோரப் பகுதிகள், வங்க கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும்,  இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீச கூடும் என்பதால் அக்டோபர் ஒன்பதாம் தேதி வரை மேற்குறிப்பிட்ட பகுதிகளில் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்