விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக பெ. சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடந்த கட்சியின் 24வது மாநில மாநாட்டின்போது பெ. சண்முகம் புதிய மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடந்தது. 3வது நாளான இன்று முக்கிய நிகழ்வாக புதிய மாநிலச் செயலாளர் தேர்வு நடைபெற்றது. கட்சியின் 80 உறுப்பினர்கள் அடங்கிய மாநிலக் குழுக் கூட்டத்தில் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது கே.பாலகிருஷ்ணன் 2வது முறையாக மாநிலச் செயலாளராக இருந்து வந்தார். அவருக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு தரப்பட மாட்டாது என்று கூறப்பட்டது. 3 முறை ஒருவர் மாநிலச் செயலாளராக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இன்று புதிய செயலாளராக பெ.சண்முகம் தேர்வாகியுள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் பெ.சண்முகம். மாணவர் சங்கத்தில் ஆரம்பத்தில் செயல்பட்டு வந்தவர் சண்முகம். பின்னர் படிப்படியாக பல்வேறு நிலைகளில் உயர்ந்து வந்த அவர் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக உள்ளார்.
மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் சண்முகம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் விவசாய பிரிவு மாநிலச் செயலாளராக இருந்தவர். வாச்சாத்தி போலீஸ் அத்துமீறல் வழக்கை நீண்ட காலம் விடாமல் நடத்தி வந்தவர் பெ. சண்முகம் என்பது குறிப்பிடத்தக்கது. மலை வாழ் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு தளங்களில் போராடி வருபவர்.
விழுப்புரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் பொலிட்பீரோ ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், பொலிட்பீரோ உறுப்பினர்கள் பிருந்தா காரத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில மாநாட்டில் பல்வேறு முக்கியத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே?: டாக்டர் அன்புமணி
எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன்: லோகேஷ் கனகராஜ்
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அவதூறு பரப்புகிறார்கள்..போற்றுவோர் போற்றட்டும்..புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்..டாக்டர் ராமதாஸ்
மலையாள நடிகை மினு முனீர் கைது.. சிறுமியை தவறாகப் பயன்படுத்தியதாக சென்னையில் புகார்
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்
Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
79வது சுதந்திர தினம்.. தாய்த் திருநாட்டின் தியாகிகளுக்கு சல்யூட்.. பாரத அன்னைக்கு வணக்கம்!
{{comments.comment}}