விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக பெ. சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடந்த கட்சியின் 24வது மாநில மாநாட்டின்போது பெ. சண்முகம் புதிய மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடந்தது. 3வது நாளான இன்று முக்கிய நிகழ்வாக புதிய மாநிலச் செயலாளர் தேர்வு நடைபெற்றது. கட்சியின் 80 உறுப்பினர்கள் அடங்கிய மாநிலக் குழுக் கூட்டத்தில் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது கே.பாலகிருஷ்ணன் 2வது முறையாக மாநிலச் செயலாளராக இருந்து வந்தார். அவருக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு தரப்பட மாட்டாது என்று கூறப்பட்டது. 3 முறை ஒருவர் மாநிலச் செயலாளராக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இன்று புதிய செயலாளராக பெ.சண்முகம் தேர்வாகியுள்ளார்.

திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் பெ.சண்முகம். மாணவர் சங்கத்தில் ஆரம்பத்தில் செயல்பட்டு வந்தவர் சண்முகம். பின்னர் படிப்படியாக பல்வேறு நிலைகளில் உயர்ந்து வந்த அவர் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக உள்ளார்.
மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் சண்முகம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் விவசாய பிரிவு மாநிலச் செயலாளராக இருந்தவர். வாச்சாத்தி போலீஸ் அத்துமீறல் வழக்கை நீண்ட காலம் விடாமல் நடத்தி வந்தவர் பெ. சண்முகம் என்பது குறிப்பிடத்தக்கது. மலை வாழ் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு தளங்களில் போராடி வருபவர்.
விழுப்புரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் பொலிட்பீரோ ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், பொலிட்பீரோ உறுப்பினர்கள் பிருந்தா காரத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில மாநாட்டில் பல்வேறு முக்கியத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!
நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!
புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்
10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?
எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
{{comments.comment}}