நாக்கின் நுனியில் ஒரு துளி மழைநீரைப் போல!

Aug 26, 2026,03:00 PM IST

- கொடைக்கானல் ப.வினு


பேசுவதற்கு எதுவுமே இருப்பதில்லை

ஆனாலும்

ஏதோ ஒரு தீவிரமான பழக்கத்தின் வழியே

உன் பெயரை

அழைத்துக் கொண்டே இருக்கிறேன்.


அந்தப் பெயரின் கடைசி எழுத்து

என் உதடுகளை விட்டுப் பிரியும் கணத்தில்

இந்த அறையின் அந்தி வெளிச்சத்தில்

ஒரு மெல்லிய நடுக்கம்

வந்து போகிறது.




நாக்கின் நுனியில்

ஒரு துளி மழைநீரைப் போல

அல்லது

விழுந்துவிடத் துடிக்கும்

உலர்ந்த இலை போல

தங்கிவிடுகிறது உன் பெயர்.


என்ன?" என்று நீ

திரும்பிப் கேட்கும் போது

சொல்வதற்கு ஒரு காரணமும் இல்லாமல்

ஏதோ ஒரு பொய்யைத் தேடித் தோற்கிறேன்.


உண்மையில்

உன் பெயர் என்பது

உன்னை அழைப்பதற்காக அல்ல.

பேச ஒன்றுமற்ற இந்தத் தனிமையில்,


நான் இன்னும்

உயிருடன்தான் இருக்கிறேன் என்பதை

எனக்கே

நிரூபித்துக் கொள்வதற்காகத்தான்.


(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்