கராச்சி: டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர் செளத் ஷகீல் புதிய உலக சாதனை படைத்துள்ளார். கவாஸ்கர், பாசில் பட்சர், சயீத் அகமது, பெர்ட் சுட்கிளிப் ஆகியோரின் சாதனைகளை அவர் முறியடித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது இந்த சாதனையைப் படைத்தார் ஷகீல். கொழும்பில் இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் 3வது நாளான நேற்று செளத் ஷகீல் தனது 7வது தொடர் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
முதல் 7 டெஸ்ட் போட்டிகளில் இதுபோல அரை சதம் போட்டு இப்படி செய்த முதல் வீரர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் ஷகீல். இதற்கு முன்பு தங்களது முதல் ஆறு போட்டிகளில் இதுபோல அரை சதம் அடித்து கவாஸ்கர், பாசில் பட்சர், சயீத் அகமது, பெர்ட் சுட்கிளிப் ஆகியோர் சாதனை படைத்திருந்தனர். அதை முறியடித்துள்ளார் ஷகீல்.
முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்களை இழந்து 210 ரன்களை எடுத்திருந்த நிலையில் பேட் செய்ய வந்தார் ஷகீல். 57 ரன்களைக் குவித்து விட்டு ஆட்டமிழந்தார்.
முன்னதாக காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது இலங்கை மண்ணில் இரட்டை சதம் அடித்த முதல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். இவருக்கு வயது 27 தான் ஆகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கையாக மாறி வருகிறார் ஷகீல்.
காலே டெஸ்ட் போட்டியில் இவர் 208 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதற்கு முன்பு பாகிஸ்தான் பேட்ஸ்மேன் முகம்மது ஹபீஸ் எடுத்திருந்த 196 ரன்கள்தான் அதிகபட்ச தனி நபர் ஸ்கோராக இருந்து வந்தது. அதை முறியடித்தார் ஷகீல். தற்போது அரை சதம் அடிப்பதில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்
அடுத்தடுத்து ஷகீல் சாதனைகளைக் குவித்து வருவதால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் பல வரலாறுகளை இவர் படைப்பார் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் விமர்சகர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.
கரூரில் விஜய் பேரணியின் போது நடந்தது இதுதான்.. வீடியோ போட்டு விளக்கிக் கூறிய அமுதா ஐஏஎஸ்!
கரூர் சம்பவத்திற்குப் பிறகு திமுக அரசு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் இன்று முதல் அக்., 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
உறுதியாக எனது அரசியல் பயணம் தொடரும்... சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்: விஜய்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கைது
விஜய்க்கு ஆதரவாக களமிறக்கப்படும் இன்ப்ளூயன்சர்கள்?.. ஆனால் இதெல்லாம் வேலைக்காகாதே!
மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
திருவண்ணாமலையில் ஆந்திரப் பெண் பலாத்காரம்.. எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்
கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாக தொடங்கிவிட்டது பாஜக: திருமாவளவன்
{{comments.comment}}