என் மக எனக்கு முக்கியம்.. தந்தை செய்த செயலால்.. விழுந்து விழுந்து சிரிக்கும் பாகிஸ்தானியர்கள்!

Sep 09, 2024,06:21 PM IST

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தனது மகளின் தலையில் சிசிடிவி கேமரா பொருத்திய தந்தையின் செயல் கலகலப்பையும் அதேசமயம், பெண்களின் நிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்ற கவலையுயம் ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தானை சேர்ந்த ஹில் என்ற இளம் பெண் தனது எக்ஸ் தள பக்கத்தில் தலையில் சிசிடிவி கேமரா பொருத்தி கொண்டு வலம் வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியான இந்த வீடியோவை பார்த்த பத்திரிகை நிருபர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அந்தப் பெண்  பாதுகாப்பு கருதியும்,  தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் தனது தந்தை தலையில் சிசிடிவி கேமராவை பொருத்தியதாக பதில் அளித்துள்ளார். அதேபோல் தந்தையின் இந்த செயலால் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.




இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இன்றி காணப்படுகிறது. இதனால் பல்வேறு பாலியல் பலாத்கார குற்றங்களும் கொலைகளும் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் கராச்சியில் நடந்த பாலியல் தாக்குதலில் இளம்பெண் ஒருவர்  பலியானார். இதனால் பெண்பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் கவலை அடைந்து வருகின்றனர். மேலும் பெற்றோர்கள் பெண்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.


அந்த வகையில்தான் இந்த தந்தை தனது மகளின் பாதுகாப்புக் கருதி மகள் தலையிலேயே சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். இது பலரையும் சிரிக்க வைத்துள்ளது. அதேசமயம், கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. வெளியே சென்ற மகளை 24 மணி நேரமும் கண்காணிக்க இதுபோன்ற சிசிடிவி கேமராக்களை தலையில் பொருத்தியதற்கு பலரும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.


ஆனால் இந்த தந்தையை விமர்சிப்பது சரியாக இருக்காது. அதற்குப் பதில், பெண்களுக்கு இந்த நிலை ஏற்படக் காரணமானவர்கள்தான் உண்மையில் வெட்கப்பட வேண்டியவர்கள்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

சுக்கிர பிரதோஷம்.. தேய்பிறை சுக்கிர பிரதோஷம் அதீத சிறப்புடையது!

news

ப்ளஸ் 1 பொதுத் தேர்வு... கணினி அறிவியல் பாடத்தில் கருணை மதிப்பெண் அறிவிப்பு!

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

Gold rate: எந்த மாற்றமும் இல்லை.. நேற்றைய நிலையிலேயே.. இன்றைய தங்கம் விலை!

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

news

Box office: தமிழ்நாட்டில் குட் பேட் திரைப்படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..?

அதிகம் பார்க்கும் செய்திகள்