கராச்சி: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, பிரதமர் பதவியில் இருந்தபோது அவருக்கு வந்த பரிசுப் பொருட்களை விற்பனை செய்த முறைகேட்டு வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இன்று லாகூரில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
70 வயதாகும் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது 2018ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அவருக்குப் பரிசாக வந்த விலைஉயர்ந்த பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக லாகூர் கோர்ட்டில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹுமாயூன் திலாவர் அளித்த தீர்ப்பின்போது, இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்திருந்தார்.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து லாகூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இம்ரான் கானை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே, தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல்செய்யவுள்ளதாக இம்ரான் கானின் வழக்கறிஞர் இந்தசார் பன்ஜோதா கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் பதவியை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இழந்தார் இம்ரான் கான். அதன் பிறகு இதுவரை அவர் மீது 150க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே மாதம் அவரை அதிரடியாக போலீஸார் கைது செய்து சென்ற செயல் பெரும் பரபரப்பையும், கலவரத்தையும் பாகிஸ்தானில் ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்த நிலையில் மீண்டும் ஒரு கைதைச் சந்தித்துள்ளார் இம்ரான் கான்.
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}