கராச்சி: பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கராச்சியிலிருந்து கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நவாப்ஷா என்ற இடத்தில் நடந்த ரம்ஜான் விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார் சர்தாரி. ரம்ஜான் சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அதன் பிறகு கட்சி தலைவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் உடனடியாக கராச்சிக்கு அழைத்து வரப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சலும் தொற்றும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிபர் சர்தாரிக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
69 வயதான சர்தாரி, மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் என்பது நினைவிருக்கலாம்.
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!
SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்
{{comments.comment}}