கராச்சி: பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கராச்சியிலிருந்து கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நவாப்ஷா என்ற இடத்தில் நடந்த ரம்ஜான் விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார் சர்தாரி. ரம்ஜான் சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அதன் பிறகு கட்சி தலைவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் உடனடியாக கராச்சிக்கு அழைத்து வரப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சலும் தொற்றும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிபர் சர்தாரிக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
69 வயதான சர்தாரி, மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் என்பது நினைவிருக்கலாம்.
இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறி வைத்து ஏவுகணைத் தாக்குதல்.. ஈரான் அறிவிப்பு
பல அமெரிக்கப் போர்விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.. குவைத் பரபரப்புத் தகவல்
இஸ்ரேலின் சரமாரி குண்டு வீச்சுக்கு இலக்கான ஈரானின் காந்தி மருத்துவமனை..!
மார்ச் மாதம் வந்தாச்சு.. என்னென்ன ஸ்பெஷல்ஸ் இருக்கு பாருங்க!
இந்தியா நியாயமா ஜெயிக்கலைங்க.. மூக்கால் அழும் பாகிஸ்தான் முன்னாள் பவுலர்!
நான் கவிஞர் லா. பெனிஸ் பேசுகிறேன்!
இப்படித்தான் வேலை செய்யுது ஏஐ.. How AI works
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? – ஒரு புதுமைப் பெண்ணின் வெற்றிச் சாட்சியம்
நாளைய உலகும் இன்றைய நம் கடமையும்!
{{comments.comment}}