வர்த்தக தடையை மீறி.. எமிரேட்ஸ் வழியாக.. இந்தியாவுக்கு பொருட்களை அனுப்பும் பாகிஸ்தான்!

May 17, 2025,05:12 PM IST

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தான் தனது வர்த்தகப் பொருட்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), ஈரான் மற்றும் வளைகுடா நாடுகள் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறதா என்பதை இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது. 


பாகிஸ்தானில் இருந்து வரும் பேரீச்சம்பழங்கள் UAE வழியாக இந்தியாவுக்குள் வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இது இந்தியா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வர்த்தக ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பொருட்களை தடுக்க, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் லேபிள்களையும், அவை எங்கிருந்து வருகின்றன என்பதையும் இந்தியா தீவிரமாக ஆய்வு செய்கிறது. 




UAE போன்ற நாடுகளிலிருந்து வரும் பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவையா என்பதை அதிகாரிகள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், எமிரேட்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வரும் பொருட்கள் பாகிஸ்தான் பொருட்களா என பரிசோதிக்கப்படுகிறது. ஒரு நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை கண்டுபிடிப்பது எளிது. ஆனால், வேறு இடங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை கண்டுபிடிப்பது கடினம். அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  தற்போது அனுப்பப்பட்டு கொண்டிருக்கும் பொருட்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன என்றார் அவர்.


ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை FY25ல் இந்தியா பாகிஸ்தானிலிருந்து $2.88 மில்லியன் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. அதில் தாவரங்கள், விதைகள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் மால்ட் சாறுகள் முக்கியமானவை. 2019ல் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானிலிருந்து வரும் பொருட்களுக்கு இந்தியா 200% வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் குறைந்தது. இந்தியா 1996ல் பாகிஸ்தானுக்கு "Most Favoured Nation (MFN)" என்ற அந்தஸ்தை வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 


ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக மே 2 அன்று பாகிஸ்தானிலிருந்து வரும் அனைத்து பொருட்களுக்கும் இந்தியா தடை விதித்தது. மூன்றாம் நாடுகள் வழியாக வரும் பொருட்களுக்கும் இந்த தடை பொருந்தும். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் இந்தியாவோடு செய்து வந்த அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்தது. மூன்றாம் நாடுகள் வழியாக நடந்த வர்த்தகமும் நிறுத்தப்பட்டது. இந்த தடைக்கு பிறகு, பாகிஸ்தான் மூன்றாம் நாடுகள் வழியாக பொருட்களை இந்தியாவுக்குள் அனுப்ப முயற்சிப்பதாக செய்திகள்  கூறுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்