இஸ்லாமாபாத் : நிலத்தில் இருந்து நிலத்திற்கு பாய்ந்து, 450 கி.மீ., தொலைவில் இருக்கும் இலக்குகளை தாக்கி, அழிக்கும் திறன் கொண்ட புதிய ஏவுகணையை பாகிஸ்தான் தற்போது வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் ஒரு ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. இது இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. Abdali Weapon System என்ற ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது. இது 450 கி.மீ தூரம் வரைக்கும் பாயும் திறன் கொண்டது. Exercise INDUS பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடந்துள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் சொல்லப்படுகிறது. Pahalgam தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது உலக நாடுகளின் கவனத்தை பாகிஸ்தான் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனை, ராணுவ வீரர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதை பார்ப்பதற்கு தான் என சொல்லப்படுகிறது. ஏவுகணையின் முக்கியமான டெக்னிக்கல் விஷயங்களை சரிபார்ப்பதற்கு இது உதவி செய்யும். குறிப்பாக, ஏவுகணையின் நேவிகேஷன் சிஸ்டம் (navigation system) மற்றும் அதன் வேகத்தை மாற்றி அமைக்கும் திறனை சோதிக்கிறது தான் முக்கிய நோக்கம் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் ஷெபாஸ் ஷரீப் மற்றும் ராணுவ அதிகாரிகள், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவம் தயாராக இருக்கு என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். "எங்களுடைய ராணுவ வீரர்கள் திறமையாக உள்ளார்கள். அவர்கள் நாட்டை காப்பாற்றுவார்கள் என நான் நம்புறேன்" என்று ஷெபாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாகிஸ்தான் போருக்கு தயார் என்பதை மறைமுகமாக அவர் கூறுவதாக சொல்லப்படுகிறது.
Line of Control (LoC) பகுதியில் அடிக்கடி சண்டை இடுவது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்சினை இவை அனைத்தும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் டென்ஷனை அதிகப்படுத்தி உள்ளது. ஏப்ரல் 22-ல் நடந்த Pahalgam தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் தலைவர்கள் இந்தியாவுக்கு எதிராக நிறைய வெறுப்பு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனால் ரெண்டு நாட்டுக்கும் இடையிலான போர் வரும் அபாயம் உருவாகி உள்ளது. எல்லையில் பதற்றமும் அதிகரித்துள்ளது.
செப்டம்பர் மாதம் வெளிநாடு செல்கிறேன்.. களப் பணிகளுக்குத் தயாராகுங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு
மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் இருவர் கைது: பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு!
கத்திக் குத்து, அரிவாள், கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு... இது தான் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி
2030 காமன்வெல்த் போட்டி.. அகமதாபாத்தில் நடத்த இந்தியா திட்டம்.. ஒப்புதல் அளித்தது IOA
தொடர்ந்து 4வது நாளாக குறைந்தது தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பச்சை சன்னா, கொத்தவரங்காய் கிரேவி.. டேஸ்ட்டியானது.. ஹெல்த்தியானது.. லஞ்ச்சுக்கு பெஸ்ட் ரெசிப்பி!
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்.. அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தார் டாக்டர் மைத்ரேயன்
பாகிஸ்தான் நம்மை அழிக்க நினைப்பதற்குள்.. பாதி பாகிஸ்தான் காலி.. இந்தியாவின் பலம் இதுதான்!
{{comments.comment}}