பாகிஸ்தானில் பயங்கரம்.. தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில்.. 13 ராணுவ வீரர்கள் பலி

Jun 28, 2025,05:29 PM IST

கராச்சி: பாகிஸ்தானில், ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.


13 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள், உள்ளூர் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட 29 பேர் காயமடைந்ததாகவும் AFP செய்தி நிறுவன செய்தி தெரிவிக்கிறது. 


கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் உள்ளூர் அரசு அதிகாரி, பெயர் குறிப்பிட விரும்பாமல் கூறியதாவது:  ஒரு தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை ராணுவ அணிவகுப்பின் மீது மோதினான். இந்த குண்டுவெடிப்பில் 13 வீரர்கள் கொல்லப்பட்டனர்; 10 ராணுவ வீரர்களும் 19 பொதுமக்களும் காயமடைந்தனர் என்றார் அவர்.




காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த தற்கொலைப்படைத் தாக்குதலால், இரண்டு வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்து ஆறு குழந்தைகள் காயமடைந்தனர். காயமடைந்த நான்கு வீரர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றார் அவர்.


இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபானின் ஒரு பிரிவான ஹபீஸ் குல் பகதூர் ஆயுதக் குழுவின் தற்கொலைப்படைப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.


2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பாகிஸ்தான் பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்த அனுமதிப்பதாக இஸ்லாமாபாத் தனது மேற்கு அண்டை நாடான ஆப்கானிஸ்தானைக் குற்றம் சாட்டுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை தலிபான்கள் மறுக்கின்றனர்.


இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய இரு மாகாணங்களிலும் அரசுக்கு எதிராகப் போராடும் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களில் சுமார் 290 பேர், பெரும்பாலும் பாதுகாப்புப் படையினர், கொல்லப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை!

news

Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

news

Tamil Poem: எஞ்சுவதே உன்னதம்!

news

உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்

news

ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு

news

முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!

news

'காக்ரோச் ஜனதா கட்சி'யின் எக்ஸ்தள பக்க முடக்கத்தை நீக்க கோர்ட் அதிரடி உத்தரவு!

news

ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!

news

எங்கள் கேப்டன் கூல்...தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்