இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு அலுவலக கட்டிடம் உள்ளிட்ட அனைத்தும் குலுங்கிய நிலையிலும் விடாமல் தொடர்ந்து செய்தி வாசித்த செய்தி வாசிப்பாளரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் மலைத் தொடர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்தியாவின் வட பகுதிகள், அதை ஒட்டிய பாகிஸ்தானின் சில பகுதிகளில் நிலநடுக்கம் மார்ச் 21 ம் தேதி இரவு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி இருந்தது. கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் பலரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்த வீடியோக்கள் பலவும் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
இந்த வீடியோக்களுக்கு இடையே பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நியூஸ் ஸ்டுடியோவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது கட்டிடம் குலுங்கி உள்ளது. அந்த சமயத்திலும் செய்திவாசிப்பாளர் விடாமல் நிலநடுக்கம் பற்றி செய்திவாசித்த 31 விநாடி வீடியோ ஒன்றும் வெளியாகி சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது.
மஹ்ஷிரிக் டிவி.,யின் பாஷ்டோ டிவி சேனலில் நிலநடுக்கம் சமயத்திலும் துணிச்சலாக செய்தி வாசிப்பாளர் ஒருவர் நிலநடுக்கம் பற்றிய செய்தியை எந்த வித சலனமும் இல்லாமல் நேரடி ஒளிபரப்பில் வாசித்துக் கொண்டிருக்கிறார் என குறிப்பிட்ட ட்விட்டரில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த செய்தி அறை, ஸ்கிரீன் என அனைத்தும் குலுங்கிய போது அவர் மட்டும் செய்தி வாசித்துக் கொண்டிருந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து விட்டு,
பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர். 160 க்கும் அதிகமானவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளனர். இந்தியாவின் டில்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களிலும் பல வீடுகளில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is
{{comments.comment}}