இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு அலுவலக கட்டிடம் உள்ளிட்ட அனைத்தும் குலுங்கிய நிலையிலும் விடாமல் தொடர்ந்து செய்தி வாசித்த செய்தி வாசிப்பாளரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் மலைத் தொடர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்தியாவின் வட பகுதிகள், அதை ஒட்டிய பாகிஸ்தானின் சில பகுதிகளில் நிலநடுக்கம் மார்ச் 21 ம் தேதி இரவு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி இருந்தது. கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் பலரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்த வீடியோக்கள் பலவும் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
இந்த வீடியோக்களுக்கு இடையே பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நியூஸ் ஸ்டுடியோவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது கட்டிடம் குலுங்கி உள்ளது. அந்த சமயத்திலும் செய்திவாசிப்பாளர் விடாமல் நிலநடுக்கம் பற்றி செய்திவாசித்த 31 விநாடி வீடியோ ஒன்றும் வெளியாகி சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது.
மஹ்ஷிரிக் டிவி.,யின் பாஷ்டோ டிவி சேனலில் நிலநடுக்கம் சமயத்திலும் துணிச்சலாக செய்தி வாசிப்பாளர் ஒருவர் நிலநடுக்கம் பற்றிய செய்தியை எந்த வித சலனமும் இல்லாமல் நேரடி ஒளிபரப்பில் வாசித்துக் கொண்டிருக்கிறார் என குறிப்பிட்ட ட்விட்டரில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த செய்தி அறை, ஸ்கிரீன் என அனைத்தும் குலுங்கிய போது அவர் மட்டும் செய்தி வாசித்துக் கொண்டிருந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து விட்டு,
பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர். 160 க்கும் அதிகமானவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளனர். இந்தியாவின் டில்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களிலும் பல வீடுகளில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}