இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு அலுவலக கட்டிடம் உள்ளிட்ட அனைத்தும் குலுங்கிய நிலையிலும் விடாமல் தொடர்ந்து செய்தி வாசித்த செய்தி வாசிப்பாளரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் மலைத் தொடர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்தியாவின் வட பகுதிகள், அதை ஒட்டிய பாகிஸ்தானின் சில பகுதிகளில் நிலநடுக்கம் மார்ச் 21 ம் தேதி இரவு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி இருந்தது. கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் பலரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்த வீடியோக்கள் பலவும் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
இந்த வீடியோக்களுக்கு இடையே பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நியூஸ் ஸ்டுடியோவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது கட்டிடம் குலுங்கி உள்ளது. அந்த சமயத்திலும் செய்திவாசிப்பாளர் விடாமல் நிலநடுக்கம் பற்றி செய்திவாசித்த 31 விநாடி வீடியோ ஒன்றும் வெளியாகி சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது.
மஹ்ஷிரிக் டிவி.,யின் பாஷ்டோ டிவி சேனலில் நிலநடுக்கம் சமயத்திலும் துணிச்சலாக செய்தி வாசிப்பாளர் ஒருவர் நிலநடுக்கம் பற்றிய செய்தியை எந்த வித சலனமும் இல்லாமல் நேரடி ஒளிபரப்பில் வாசித்துக் கொண்டிருக்கிறார் என குறிப்பிட்ட ட்விட்டரில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த செய்தி அறை, ஸ்கிரீன் என அனைத்தும் குலுங்கிய போது அவர் மட்டும் செய்தி வாசித்துக் கொண்டிருந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து விட்டு,
பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர். 160 க்கும் அதிகமானவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளனர். இந்தியாவின் டில்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களிலும் பல வீடுகளில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}