என்ன ஒரு கடமை உணர்ச்சி.. அடாத நிலநடுக்கத்திலும் விடாமல் செய்தி வாதித்த நியூஸ் ரீடர்!

Mar 22, 2023,03:05 PM IST

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு அலுவலக கட்டிடம் உள்ளிட்ட அனைத்தும் குலுங்கிய நிலையிலும் விடாமல் தொடர்ந்து செய்தி வாசித்த செய்தி வாசிப்பாளரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் மலைத் தொடர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்தியாவின் வட பகுதிகள், அதை ஒட்டிய பாகிஸ்தானின் சில பகுதிகளில் நிலநடுக்கம் மார்ச் 21 ம் தேதி இரவு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி இருந்தது. கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் பலரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்த வீடியோக்கள் பலவும் இணையத்தில் வெளியாகி வருகின்றன.




இந்த வீடியோக்களுக்கு இடையே பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நியூஸ் ஸ்டுடியோவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது கட்டிடம் குலுங்கி உள்ளது. அந்த சமயத்திலும் செய்திவாசிப்பாளர் விடாமல் நிலநடுக்கம் பற்றி செய்திவாசித்த 31 விநாடி வீடியோ ஒன்றும் வெளியாகி சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது.


மஹ்ஷிரிக் டிவி.,யின் பாஷ்டோ டிவி சேனலில் நிலநடுக்கம் சமயத்திலும் துணிச்சலாக செய்தி வாசிப்பாளர் ஒருவர் நிலநடுக்கம் பற்றிய செய்தியை எந்த வித சலனமும் இல்லாமல் நேரடி ஒளிபரப்பில் வாசித்துக் கொண்டிருக்கிறார் என குறிப்பிட்ட ட்விட்டரில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த செய்தி அறை, ஸ்கிரீன் என அனைத்தும் குலுங்கிய போது அவர் மட்டும் செய்தி வாசித்துக் கொண்டிருந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து விட்டு, 


பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர். 160 க்கும் அதிகமானவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளனர். இந்தியாவின் டில்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களிலும் பல வீடுகளில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்