பல் போன ரகசியம் (கலகல கதை)!

Jan 12, 2026,04:30 PM IST

- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி


அப்புசாமி பல் வலி தாங்க முடியாமல் பல் மருத்துவரைப் பார்க்கச் சென்றார்.


"டாக்டர், என் வலது பக்கப் பல் ரொம்ப வலிக்குது. அதை எடுத்துவிடுங்கள்!" என்றார்.


மருத்துவர்: "கண்டிப்பாக. கொஞ்சம் வாயை திறங்கள்."


அப்புசாமி வாய் திறக்க, மருத்துவர்:  "ஐயோ! உங்களது இடது பக்கப் பல் ரொம்ப மோசமாக இருக்கே, பயங்கரமா ஆடுதே.  இதையும் எடுத்து விடலாமா?" என்று கேட்டார்.


அப்புசாமி அவசரமாக: "வேண்டாம் டாக்டர்! வலது பக்கப் பல்லை மட்டும் எடுங்கள்."என்றார்.




சிகிச்சை முடிந்ததும், மருத்துவர் சிரித்துக்கொண்டே: "இவ்வளவு ஆடுகிற நிலையில் இருந்த இடது பக்கப் பல்லை ஏன் எடுக்க வேண்டாம் என்று சொன்னீர்கள்?  சாப்பிடும் போது பல்லையும் சேர்த்து முழுங்கி விட வாய்ப்புக்கள் அதிகம்" என்று கேட்டார்.


அப்புசாமி கண் சிமிட்டியபடி: "அதுதான் என் மனைவியின் பிரியமான பற்கள் டாக்டர்.  அவளே எடுத்து விடுவாள். எதற்கு இதற்குப் போய் உங்களுக்கு ஃபீஸ் கொடுத்துக்கொண்டு..?  என்றார்.


உங்க மனைவி பல் டாக்டரா..?


இல்ல டாக்டர். அவளின்  அன்பான கை... டாக்டர்.


என்ன கை டாக்டரா ..? எனக்கு புரியலையே..?


ஒவ்வொரு முறையும் என்னுடன்  சண்டை போடும் போது, அவள் என் இடது பக்கக் கன்னத்தில் தான், தன் கையால்  ஓங்கி குத்துவாள் . அந்தப் பல்  அவள் குத்தும் போது தானாகவே விழுந்து விடும்.  அப்போ வெளியே துப்பி விடுவேன்.


மருத்துவர் அதிர்ந்து போனார்.. பின்னர் சிரித்துக் கொண்டே " அடுத்த சண்டை எப்போது என்றார்.


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார்.  கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்