C.M.சிங்காரவேலன் எனும் நான்... புதிய படத்தை எழுதி இயக்கும் பார்த்திபன்.. செம ஸ்டில் வெளியீடு!

Sep 13, 2025,05:23 PM IST
சென்னை: நான் CM நாற்காலியில் அமர்ந்த பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்கு பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது  என்பது தான் என்ற போஸ்டரை வெளியிட்டு அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் பார்த்தின்.

பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது, தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுது்த மாதம் வெளிவர உள்ளது. இந்நிலையில், பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில், 

Friends, 
இன்று மாலை 4.46க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது. உஷார்!!! என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பார்த்திபன் அரசியலுக்கு வருப்போகிறார் போலும் என்று இணையதள பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அதற்காக 4.46க்காகவும் காத்திருந்தனர்.



இந்நிலையில், மற்றும் ஒரு போஸ்டரை வெளியிட்டார். அதில், பெரியோர்களே, தாய்மார்களே,
வாக்களப்  பெருமக்களே!

ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்!

போடுங்கம்மா ஓட்டு
Boat’சின்னத்தைப் பாத்து!

இப்படிக்கு,
C.M .சிங்காரவேலன் எனும் நான்….
‘சோத்துக் கட்சி’ எனப் பதிவிட்டு தான் எழுதி இயக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை பார்த்த மக்கள் இதுக்கு தான் இந்த அலப்பறையா என்று கமண்ட் செய்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

news

பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

news

த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்

news

காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்

news

புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை

news

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்

news

சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

news

கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி

news

திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை

அதிகம் பார்க்கும் செய்திகள்