திருநெல்வேலி: தென்காசி டூ செங்கோட்டை இடையே நாளை அதாவது ஏப்ரல் 1 முதல் 30-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளை மட்டும் தவிர்த்து அனைத்து நாட்களிலும் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தென்காசி செங்கோட்டை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் ஒன்று முதல் 30 ஆம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளை மட்டும் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது .
அதாவது மதுரை டூ செங்கோட்டை பயணிகள் ரயில், செங்கோட்டை டூ நெல்லை பயணிகள் ரயில் சேவைகள் என இரு மார்க்கத்திலும் செல்லக்கூடிய தென்காசி மற்றும் செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, மதுரையில் இருந்து காலை 7:25 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரயில் (வண்டி எண் 56719) மற்றும் மறு மார்க்கமாக செங்கோட்டையில் இருந்து மதியம் 2:05 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 56738) நெல்லை பயணிகள் ரயில்கள், தென்காசி டூ செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் நெல்லையில் இருந்து காலை 9:50 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 56735) நெல்லை- செங்கோட்டை பயணிகள் ரயில் மற்றும் மறு மார்க்கமாக செங்கோட்டையில் இருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 56720) செங்கோட்டை- மதுரை பயணிகள் ரயில் சேவைகள் தென்காசி டூ செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
என்னையா இது... நேற்று குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயர்வு! எவ்வளவு தெரியுமா?
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல சில உள்ளங்களை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}