விநாயகர் துதி

Jun 20, 2026,12:21 PM IST

 - மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


ஆதி கணபதியின் அடி  தொழுதுத்

துவங்குகிறேன் கவி எழுத!


அந்த ஆதிசக்தி மகன் எனக்கு

அடி எடுத்துத்  தர வேண்டும்!


சிந்து கவி நான் எழுத சிவன்

மகன் இவன் உதவ வேண்டும்!


ஆனைமுகன் மனமிரங்கி

அடியேனைக் காக்க வேண்டும்!


சந்தக்  கவி  நான் எழுத

சக்தி மகன் அருள வேண்டும்!




வலம்புரி விநாயகர்

வாழ்வு தர வரவேண்டும்!


சிவனின் மூத்த பிள்ளை !

சிறப்புகளைத் தர வேண்டும்!


கருணைக்  கடல் போல

கணபதி இவர் அருள் புரிய,


பொருநை நதி போல

பொங்கு கவி நான் எழுத,


அருளைத்  தர வேண்டும்!- அந்த

ஆனைமுகன் கணபதியே!


அவர் அருளாலே

அவரை வணங்குகிறேன்!


அவர் இருப்பதனால்

எப்போதும் மகிழ்கின்றேன்!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Double Meaning talks: மனிதர்கள் எப்போது டபுள் மீனிங் + கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பிக்கிறார்கள்?

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 : அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும்

news

தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகள் ஏமாற்றம்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

news

புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனுடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் திடீர் சந்திப்பு

news

பிரதமர் மோடியின் 2026-ஆம் ஆண்டு வெளிநாட்டு பயணச் செலவு: மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

news

“வெற்றிப் பயணம் தொடரட்டும்!”: அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: திமுக, தேமுதிக.,வின் கருத்து என்ன?

news

முருக பக்தியின் மகத்துவம் பேசும் ஆடி கிருத்திகை –காவடி, பால்குடம், பக்தி பேரலை

news

பெண்களை அச்சுறுத்தும் ‘முடக்கு வாதம்’: அறிகுறிகளும், கண்டறியும் வழிகளும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்