சுற்றி வளைக்கும் என தெரிந்தும் .. பற்றிக் கொண்டிருக்கிறாய்

Mar 18, 2026,02:49 PM IST

பற்று...!


- பா.பானுமதி


சுற்றி வளைக்கும் என தெரிந்தும் 

பற்றி கொண்டிருக்கிறாய் 


அழுத்தத்திற்கு ஆளாகும் என அறிந்தும் 

அதிலே அமிழ்ந்து போகிறாய் 


நிரந்தரம் இல்லை என தெரிந்தும் 

நித்தமும் தேடுகிறாய் 


கடினம் என்று கண்ட பின்பும் 

அதற்குள்ளே கரைகிறாய்




இரைச்சல் என அறிந்த பின்பும் 

இசையாக்க முயல்கிறாய் 


காலை இழுக்கும் என்று தெரிந்தாலும் 

கவலைப்படாமல் கால் வைக்கிறாய் 


கை கடிக்கும் எனப் புரிந்தும் 

கலங்கிடாமல் கை கொடுக்கிறாய் 


விதியின் விரல்கள் விரல்மிட்டு அழைத்தால் 

விளங்காமல் பிடித்துக் கொள்கிறாய்


ஆழம் அறிந்தும் அஞ்சிடாமல் 

நீராட பார்க்கிறாய் 


கண்ணீரை தந்தாலும் கரைந்திடாமல் 

பன்னீர் தெளிக்கிறாய் 


பற்றுகள் பலம் மிக்கது!


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்

news

மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

news

தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி

news

தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

news

ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!

news

சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி

news

'தடை நியாயமானதே..' டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு!

news

ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து

news

முதல் முறை வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இபிஎஃப் ரூ.15,000 ஊக்கத்தொகை

அதிகம் பார்க்கும் செய்திகள்