பற்று...!
- பா.பானுமதி
சுற்றி வளைக்கும் என தெரிந்தும்
பற்றி கொண்டிருக்கிறாய்
அழுத்தத்திற்கு ஆளாகும் என அறிந்தும்
அதிலே அமிழ்ந்து போகிறாய்
நிரந்தரம் இல்லை என தெரிந்தும்
நித்தமும் தேடுகிறாய்
கடினம் என்று கண்ட பின்பும்
அதற்குள்ளே கரைகிறாய்

இரைச்சல் என அறிந்த பின்பும்
இசையாக்க முயல்கிறாய்
காலை இழுக்கும் என்று தெரிந்தாலும்
கவலைப்படாமல் கால் வைக்கிறாய்
கை கடிக்கும் எனப் புரிந்தும்
கலங்கிடாமல் கை கொடுக்கிறாய்
விதியின் விரல்கள் விரல்மிட்டு அழைத்தால்
விளங்காமல் பிடித்துக் கொள்கிறாய்
கண்ணீரை தந்தாலும் கரைந்திடாமல்
பன்னீர் தெளிக்கிறாய்
பற்றுகள் பலம் மிக்கது!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}