- ஸ்வர்ணலட்சுமி
பழமொழிகள் மக்களுக்கு பல்வேறு நல்ல விஷயங்களைச் சொல்ல ஆதி காலத்தில் பயன்படுத்தப்பட்டது. பழமொழிகள் மக்களுக்கு தேவையானதைச் சொல்லி வைத்துச் சென்றுள்ளனர் நம்முடைய முன்னோர்கள்.
தன் காயம் காக்க வெங்காயம் போதும்.. இன்று இந்தப் பழமொழியை பற்றி இங்கு பார்ப்போம், நம் உடல் நலத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கூறுவதே இப்பழமொழி.
உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது. ஆதலால் எந்த விபரமும் தெரியாத வரை எந்த ஒரு விஷயமும் தெரியாவிட்டால் அவர்களை வெங்காயம் என்று கேலியாக கூறுவர். ஆனால் வெங்காயம் மருத்துவ குணம் வாய்ந்தது. எந்தக் காயமும் படாமல் நம்மை அழ வைப்பது வெங்காயம். அத்தகைய சிறப்பு வாய்ந்தது வெங்காயம்.
அதாங்க உரிக்க உரிக்க தானாக கண்களில் நீர் வரும். அதற்கு காரணம் அதில் உள்ள வேதிப்பொருள் காற்றோடு கலப்பது தான் அது கண்களுக்கு எரிச்சலை தூண்டி கண்ணீர் வரவழைக்கிறது. வெங்காயத்தில் அதிக பயன்கள் உண்டு. அவை என்னவென்று பார்ப்போமா..!
இரும்புச்சத்து புரதச்சத்து வைட்டமின் ஏ பி சி சுண்ணாம்பு சத்து நிறைந்தது போலிக் அமிலம் பொட்டாசியம் பீட்டா கரோட்டின் போன்றவை உள்ளது. இவை இளமையாக இருக்க கண்பார்வை ரத்த விருத்தி போன்றவற்றை பாதுகாப்பதில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது.

சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம், வெள்ளை வெங்காயம் என்ற இன்னும் பல வகைகள் உண்டு. நம் அன்றாட சமையலறையில் இருக்க வேண்டியவை இவை. சைவ மற்றும் அசைவ உணவில் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம்.
சின்ன வெங்காயத்தில் அதிக ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. ஜலதோஷம் இருமல் சளி இருந்தால் வெங்காயச் சாறுடன் தேன் கலந்து கொடுப்பார்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடியது வெங்காயம். சின்ன வெங்காயத்தை தீயில் சுட்டு சிறிது மஞ்சள் நெய் கலந்து இளஞ்சூட்டோடு உடலில் ஏதாவது கட்டிகள் இருந்தால் அதன் மீது வைத்து கட்டுவார்கள்.
தலைவலி தீர்க்க தலைமுடி உதிராமல் இருக்க தேங்காய் எண்ணெயில் பெரிய வெங்காயத்தை அரைத்து காய்ச்சி பயன்படுத்துவர்.
பாம்பு தேள் கடிக்கு உடனடி மருந்தாகிறது வெங்காயம். உடல் எடை குறைக்க விரும்புவோர் நிறைய சிறிய வெங்காயம் சாப்பிடலாம்.
பெரிய வெங்காயம் அசைவ உணவுகளில் பிரியாணி சிக்கன் கிரேவி மட்டன் கிரேவி அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
சின்ன வெங்காயம் சாம்பார் கீரை பொரியல் கீரை கடையல் கூட்டு காய்கறி பொரியல் ஆகிய அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
அம்மை நோய் வந்தவர்களுக்கு சிறிய வெங்காயத்தை மாலையாக கோர்த்து கழுத்தில் அணிவிப்பர். அது கிருமிகளை ஈர்க்கும் சக்தி அதிகம் உள்ளது.
இவ்வாறு நம் உடலில் உச்சி முதல் பாதம் வரை எல்லா காயத்திற்கும் உடல் உள்ளுறுப்புகளுக்கும் மருந்தாக விளங்குகிறது இந்த வெங்காயம். அதனால்தான் தன் காயம் காக்க வெங்காயம் போதும் என்ற பழமொழி வந்தது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026...வேட்புமனு தாக்கல் துவங்கியது...யாருக்கு வெற்றி?
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
தொடுதிரையில் தொலைந்த நட்பு!
காத்திருப்பும் அழகானதே!
பட்டுச் சட்டை போட்ட மச்சான்!
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
{{comments.comment}}