அம்ரோஹா, உத்தரப் பிரதேசம்: இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமியின் சொந்த கிராமத்தில் மக்கள் கண்டு களித்து டீம் இந்தியாவை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்காக மிகப் பிரமாதமாக ஜொலித்த நாயகர்களில் முக்கியமானவராக உருவெடுத்துள்ளார் ஷமி. ஆரம்பத்தில் சில போட்டிகளில் அவருக்கு ஆடும் வாய்ப்பு தரப்படவில்லை. ஆனால் பிறகு கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் சூப்பராக பயன்படுத்தி அதிரிபுதிரியான பந்து வீச்சைக் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார் ஷமி.
குறிப்பாக அரை இறுதிப் போட்டியில் அவரது பந்து வீச்சு அனைவரையும் மிரள வைத்து விட்டது. ஷமியின் இந்த எழுச்சிதான் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவின் மிக முக்கியமான அம்சமாகியுள்ளது. இந்த நிலையில் அவரது சொந்த கிராமம், உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ளது. அங்கு பெரிய ஸ்கிரீன் கட்டி அதில் போட்டியை நேரடியாக ஒளிபரப்பி வருகின்றனர். அதில் கிராம மக்கள் கூடி போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.
சிறார்களும், இளைஞர்களும் மரத்தின் மீதும் ஏறி அமர்ந்து போட்டியைப் பார்த்து ரசித்து வருகின்றனர். அவர்களது ஹீரோ இன்னும் வரவில்லை. அவரது பந்து வீச்சுக்காக மொத்த கிராமமும் ஆவலுடன் காத்திருக்கிறது. தற்போது இந்தியாவின் பேட்டிங்கை அவர்கள் கண்டு களித்து வருகின்றனர்.
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}