ஏன் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார் தெரியுமா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

Mar 04, 2024,06:13 PM IST

மயிலாடுதுறை: நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்க இருப்பதால் அடிக்கடி பிரதமர் மோடி தமிழ்நாடுக்கு வரத் தொடங்கி இருக்கிறார். அண்மையில் ஏற்பட்ட இரண்டு இயற்கை பேரிடர்களுக்கு ஒரு பைசா கூட நிதி தரவில்லை. தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் பிரதமர் மோடியை பார்த்து ஏமாற மாட்டார்கள் என்று  கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.


இன்று சென்னை வரும் பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதையொட்டி சென்னையில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் வரவுள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரக் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். 




கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக தமிழகம் வருகிறார் மோடி. சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த அவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் திருநெல்வேலியில் பாஜக பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். திமுக அரசை கடுமையாகத் தாக்கிப் பேசி திமுகவிடையே அதிருப்தி அலையை ஏற்படுத்தினார். இதனால், திமுகவினரும் பதிலுக்க மோடியை பலமாக தாக்கி பேசி வருகின்றனர். 

இந்நிலையில், மயிலாடுதுறை திருவாரூர் நாகை மாவட்டங்களின் ரூபாய் 656 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூபாய் 423 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அத்துடன்  12,653 பயனாளிகளுக்கு ரூ. 655.44 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்டங்களை வழங்கி பின்னர் அவர் அப்போது பேசுகையில், 


தேர்தல் அறிவிக்க இருப்பதால் அடிக்கடி பிரதமர் மோடி தமிழ்நாடு வரத் தொடங்கி இருக்கிறார். வாக்கு மட்டும் போதும் என்று நினைத்து தமிழ்நாட்டுக்கு வருகிறார் மோடி. அண்மையில் ஏற்பட்ட இரண்டு இயற்கை பேரிடர்களுக்கு ஒரு பைசா கூட நிதி தரவில்லை. தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மோடியை பார்த்து ஏமாற மாட்டார்கள். தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் வளர்ச்சிக்காகவும் பாடுபடும்  திராவிடல் மாடல் அரசின் பக்கமே மக்கள் நிற்பார்கள் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்